Advertisment

எஸ்.பி.பி. உடலுக்கு இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இறுதியஞ்சலி!

singer sp balasubramanyam chennai

Advertisment

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.பி.யின் உடலுக்கு இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், பாடகர் மனோ நேரில் இறுதியஞ்சலி செலுத்தினர். அப்போது, எஸ்.பி.பி. உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார் பாடகர் மனோ.அதேபோல் எஸ்.பி.பி. உடலுக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதனிடையே, பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி. உடலுக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து ரசிகர்கள், பொதுமக்கள் இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment

அஞ்சலிக்கு பிறகு இன்று (26/09/2020) காலை 11.00 மணிக்கு எஸ்.பி.பி.யின் உடல் தாமரைப்பக்கத்தில் காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Chennai s.p.balasubramaniam singer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe