பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். பின் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த எஸ்.பி.பி-க்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. அதன்காரணமாக மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்தனர். தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று (25.09.2020) மதியம்1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி பாடகர் எஸ்.பி.பி. காலமானார்.

Advertisment

இவரது உடல், தற்போது மருத்துவமனையிலிருந்து நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் எஸ்.பி.பி.யின் உடல் நாளை திருவள்ளூவரில் உள்ள தாமரைப்பாக்கம் எனுமிடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.