Skip to main content

குளத்தை தூர்வாரும் பணிக்கு ரூபாய் 80,000 கொடுத்து உதவிய சிங்கப்பூர் தமிழர்...குவியும் பாராட்டுக்கள்!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் உள்ள 564  ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இப்பகுதி மக்கள், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தும், இதுகுறித்து கண்டு கொள்ளப்படாமல் இருந்தது.  அரசின் புறக்கணிப்பு பொதுமக்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தான் இப்பகுதி இளைஞர்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்த கடைமடைப் பகுதி விவசாயிகள் சங்கம் (கைஃபா) என்ற அமைப்பை தொடங்கி தங்கள் சொந்தப் பணத்தை கொண்டும், பொதுமக்களிடம் நன்கொடையாக நிதியை வசூலித்து அதன் மூலம் பெரிய குளத்தை தூர்வாரும் பணியில் கடந்த 32 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.  பணிகள் தொடங்கிய முதல் நாளில் அமெரிக்காவில் வசிக்கும் இளைஞர் ரூ. 1 லட்சம் நன்கொடையாக கொடுத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு விவசாயிகள், தொழிலாளிகள், தொழிலதிபர்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் குளம் சீரமைக்க தாராளமாக நிதியும், மற்ற உதவிகளும் செய்து வருகின்றனர்.

 

Singapore Tamils ​​who contributed Rs. 80,000 to the project For the task of inflating the pond

 

 

இந்நிலையில், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட பொன்னாங்கண்ணிக்காடு கிராமத்தினர் மற்றும் கொப்பி பொங்கல் விழாக் குழுவினர் சார்பில் கிராமத்தில் நிதி வசூலிக்கப்பட்டது. இதில் வசூலான தொகை ரூ 1 லட்சத்து 51 ஆயிரத்து 501 ஐ வியாழக்கிழமை அன்று  ஒருங்கிணைந்த கடைமடைப் பகுதி விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.  இதனைப் பெற்றுக் கொண்ட நிர்வாகிகள் பொன்னாங்கண்ணிக்காடு கிராமத்தினர் மற்றும் கொப்பி பொங்கல் விழாக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும், இது குறித்து பேசிய விவசாய சங்க நிர்வாகிகள், கிராமத்தினர் உதவிகள் செய்து ஊக்கமளிப்பது எங்கள் பணிக்கு வேகம் கொடுக்கிறது.

 

Singapore Tamils ​​who contributed Rs. 80,000 to the project For the task of inflating the pond

 

 

இதே போல ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள இளைஞர்கள் நீர்நிலை சீரமைப்பை தொடங்கினால் அனைத்து தரப்பு மக்களும் உதவிகள் செய்ய தயாராக உள்ளனர். விரைவில் தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை மீட்டு நிலத்தடி நீரை பெருக்கி வறட்சியில்லாத மாநிலமாக்க முடியும். அதனால் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞாகள் குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்க முன்வர வேண்டும் என்றனர். இதே போல தஞ்சை மாவட்டத்தில் ஒட்டங்காடு, கிராமத்திலும் இளைஞர்களால் குளம் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் களத்தூரில் தொடங்கிய இளைஞர்களின் நீர்நிலை சீரமைப்பு பணிகள் அப்படியே பரவி புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கமல், வடகாடு, மாங்காடு, உள்ளிட்ட பல கிராமங்களிலும் பரவி இளைஞர்கள் களமிறங்கியுள்ளனர்.

 


இந்த நிலையில் தான் கொத்தமங்கலத்தில் பணிகளைத் தொடங்கிய இளைஞர்களை ஊக்கப்படுத்த 100 நாள் வேலையில் குளம் வெட்டி சேமித்த ரூ. 10 ஆயிரம் பணத்தை குளம் சீரமைக்க இளைஞர்களிடம கொடுத்தார் ராஜம்மாள் பாட்டி. அதன் பிறகு பலதரப்பிலும் நன்கொடைகள் கிடைத்து வருவதால் பணிகள் 75 நாட்களைக் கடந்தும் தொடந்து நடந்து வருகிறது. பள்ளி மாணவர்கள் தங்கள் உண்டியல் சேமிப்பையும் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தான் சிங்கப்பரில் வசிக்கும் எம்.ஆர்.ரமேஷ் என்ற இளைஞர் குளம் சீரமைக்க இயக்கப்படும் ஜேசிபிக்கு ஒரு மாத வாடகை ரூ. 80 ஆயிரத்தை மொத்தமாக வழங்கி இருக்கிறார். இந்த பெரிய உதவிக்காக இளைஞர்கள் மட்டுமின்றி கிராம மக்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.

 

 


    

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.