Skip to main content

ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு வன்கொடுமை! 4 மாணவர்கள் கைது! 3 இளைஞர்கள் தலைமறைவு!

Published on 16/04/2020 | Edited on 16/04/2020

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 15 வயதான பள்ளி மாணவி  தன் உறவினர் வீட்டில் இருந்து படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவர்கள்  மற்றும் அக்கம் பக்கத்தினர் 10 பேர் தனித்தனியாக அந்த மாணவியிடம்   வன்கொடுமை செய்து வந்திருக்கின்றனர்.

  s

 

இந்த நிலையில் கரோனா நோய் தொற்றால் பள்ளிக் கூடங்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதாலும்,  மாணவியிடம் தவறாக நடந்து கொள்பவர்களுக்கு  அது வசதியாகி விட்டது.

அந்த பள்ளி மாணவி  தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருந்ததால், கோவை அரசு மருத்துவமனைக்கு அந்த மாணவியை உறவினர்கள் கூட்டிச் சென்றனர். அப்போது அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.
 

nakkheeran app



உடனே, ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு போன் அடித்த  மருத்துவமனை நிர்வாகம்,   ‘’மேடம்..  பள்ளி மாணவி கர்ப்பமாக இருக்கிறாள். நீங்கள் வந்து விசாரியுங்கள்’’ எனச் சொல்லியுள்ளார்கள்.   அதிர்ச்சி அடைந்த மகளிர் போலீசார், அந்த மாணவியிடம் விசாரித்ததில், தன்னுடன் படிக்கும் நான்கு மாணவர்கள் என்னிடம் தப்பாக நடந்து கொண்டார்கள். அதை செல்போனில் படம் எடுத்துக் கொண்டு மிரட்டினார்கள்.

என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் சில அண்ணன்களுக்கும் அந்த வீடியோக்களை காட்டி இருக்கிறார்கள்.  அவர்களும், வீடியோக்களை வெளியில் விட்டு விடுவோம் என மிரட்டி என்னிடம் தப்பாக நடந்து கொண்டார்கள்.. என அந்த மாணவி கதறியிருக்கிறாள். இதைக் கேட்டுக் கொண்ட மகளிர் போலீஸ்,  4 பள்ளி மாணவர்கள் உட்பட 7 பேரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகிவிட்ட  3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.