Skip to main content

எளிமை, நேர்மை, உழைப்பு..! தமிழக அரசின் விருது பெற்ற சக்தி மசாலா நிறுவனம்!

Published on 15/08/2020 | Edited on 15/08/2020
Sakthi Masala

 

 

மிகப் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் செய்ப இயலாத துணிச்சலான செயல்பாடுகளை சிறு நிறுவனமாக தொடங்கப்பட்டு அவர்களின் நேர்மையான உழைப்பால் உயர்ந்து நல்ல சேவைகள் செய்யும் நம்ம ஊர் தொழில் நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி உழைப்பின் மூலமே உயர்ந்து இன்று சமையல் மசாலா பொருட்கள் தயாரிப்பாளர்களில் முதல் இடத்தில் இருப்பவர்கள் ஈரோட்டைச் சேர்ந்த சக்தி மசாலா நிறுவனம். 

 

திரு. P.C.துரைசாமி அவரது துணைவியார் சாந்தி துரைசாமி ஆகியோர் தான் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். சம்பளம் கொடுத்தால் தொழிலாளர்கள் வேலை செய்வார்கள் என்ற முதலாளித்துவ சிந்தனையில்லாமல் தொழிலாளர்களின் குடும்ப நலனிலும் அக்கரை செலுத்துகிறார்கள். அதே போல் உங்களால் எந்த வேலையும் செய்ய முடியாது என சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்படுபவர்களான கண், கை, கால் என உடல் உறுப்பில் குறைபாடு இருக்கிற மாற்றுத்திறனாளிகளுக்கு "உங்களால் முடியும். உழைப்புக்கு எதுவும் தடையில்லை" என அவர்களுக்கு வாழ்வியல் நம்பிக்கை கொடுத்து அப்படிப்பட்டவர்களை தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய வைத்துள்ளார்கள் இந்த தொழிலதிபர்கள். 

 

Sakthi Masala

 

கடந்த 30 வருடங்களாக ஆயிரக்கணக்கான மாற்று திறனாளிகள் இந்நிறுவனத்தில் பணிபுரிந்து சுயமாக உழைப்பின் மூலம் தங்களின் குடும்ப வறுமையை அகற்றியுள்ளார்கள் இந்த கரோனா காலத்திலும் தற்போதும் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பணி புரிகிறார்கள். இதற்காக இவர்களுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளது. இன்று இந்திய நாட்டின் 74 வது சுதந்திர தினம் இதில் சிறப்பு வாய்ந்த, திறமை கொண்டவர்களுக்கு விருது கொடுப்பது தமிழக அரசின் வழக்கம். 

 

அதன்படி இன்று சக்தி மசாலா நிறுவனத்திற்கு மாற்று திறனாளிகளின் மேம்பாட்டுக்கு தொடர்ந்து செயல்படுவதற்கு தமிழக அரசின் சிறப்பு விருதினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். விருது பெறுவதற்கு தகுதியானவர்கள் என்பது அவர்களின் எளிமையான செயல்பாடுகளே சாட்சி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விருது வென்ற  'ஐயோ சாமி...’ பாடல் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ayyo sami gets edison award

அண்மையில் நடைபெற்ற 16வது எடிசன் திரைப்பட விருது விழாவில்  கவிஞர் பொத்துவில் அஸ்மினின்
 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் (Best Sensational Song -2023) விருதினைப் பெற்றுள்ளது. 'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். 

பாடலை பிரபல இலங்கை இசையமைப்பாளர் சனுக்க இசையமைக்க இலங்கையை சேர்ந்த பிரபல பாடகி விண்டி பாடியுள்ளார். இலங்கையில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் இலங்கை தமிழ் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது. இவ்விருதினை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் சனுக்க, பாடகி விண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, சென்னைக்கான ஆஸ்திரேலியா கவுன்சிலர் டேவிட் ஆகியோர் விருதை வழங்கினர்.
 

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.