Skip to main content

வைகோவிடம் கதறி அழுத சிம்பு!

Published on 15/04/2018 | Edited on 15/04/2018

மதிமுக தலைவர் வைகோவின் உறவினர் கடந்த ஏப்ரல் 13 அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டி தீக்குளித்தார். 90 சதவிகிதத்திற்கும் மேல் எரிந்து சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்த வைகோ கூறியது...

 

vaiko press



"என்னுடைய துணைவியார் ரேணுகா தேவியின் அண்ணன் ராமானுஜம் அவர்களின் மூத்த மகன் சரவணன் சுரேஷ், நேற்று காலை விருதுநகர் அருகே உள்ள சூரக்கரையில் திடீரென தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு பற்றவைத்தார். பதறி வந்து தீயை அணைத்தவர்களிடம், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், GSTயை நீக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் அடிப்படை சிகிச்சை கொடுத்த பொழுது தெளிவாகப் பேசிய அவர், "என்னை காப்பாற்ற முயலாதீர்கள். என் உயிர் காவிரிக்காக போகட்டும்" என்று கூறியிருக்கிறார்.

 

vaiko crying



பின்னர் அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தோம். ஏற்கனவே 2009இல் நான் நாடாளுமன்ற தேர்தலில் தோற்ற போது தீக்குளித்த எங்கள் கட்சி செயலாளர் அய்யனாரை இங்கு இரண்டரை மாதம் வைத்து காப்பாற்றினேன். நேற்று நான் மருத்துவர்களிடம் பேசிய பொழுதே, காப்பாற்ற வாய்ப்பு குறைவு என்று கூறினார்கள். முழுவதும் கருகிய அவரது உடலைக் காணும் மனவலிமை எங்களுக்கு இல்லை.

 

simbu crying



இந்த செய்தியைக் கேட்டு திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கவிஞர் வைரமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் என்னைத் தொடர்பு கொண்டு அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

நான் நேரடியாகப் பழகியிராத நடிகர் சிம்பு என்னைத் தொடர்பு கொண்டு, தொலைபேசியிலேயே கதறி அழுதார். "இந்தக் காட்சியைப் பார்த்து இரவெல்லாம் கடவுளை வேண்டினேன், அவர் பிழைக்க வேண்டுமென்று" என்றார். அரசியலுக்கு தொடர்பில்லாத அவரது மனிதாபிமானத்திற்கு நன்றி சொன்னேன்.

அனைத்தையும் தாண்டி அவர் மரணமடைந்தார். காவிரிக்காக நாம் உயிருடன் இருந்து போராட வேண்டும். இந்த மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது. நம் உரிமையைப் பெற நாம் உறுதியுடன் நின்று போராட வேண்டும். தலைமை நீதிபதி நீதியை கொன்றுவிட்டார். இப்படி நான் பேசுவதால் என் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தால் நான் தனியாளாக நின்று வாதாடுவேன்."

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.