Skip to main content

மறைந்த தந்தையை நேரில் கொண்டுவந்த சிலிகான் சிலை... மணப்பெண்ணுக்கு சகோதரிகள் கொடுத்த அதிர்ச்சி!!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

thanjavur district statue incident

 

தஞ்சாவூரில் எட்டு ஆண்டுகளுக்கு முன் இறந்த தந்தையை சிலையாக வடிவமைத்து, உடன்பிறந்த தங்கைக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் சகோதரிகள்.

 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்த நிலையில், இரண்டு பெண் குழந்தைகளுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைத்தார் செல்வம். இந்நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக உடல்நலக் குறைவால் செல்வம் இறந்துவிட்டார். இந்நிலையில் கடைசி மகளான லட்சுமி பிரபாவுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. தனது சகோதரிகள் இரண்டு பேரின் திருமணத்தை அப்பா முன்னின்று நடத்திய நிலையில், தன்னுடைய திருமணத்தில் அப்பா இல்லையே என தனது சகோதரிகளிடம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் லட்சுமி பிரபா.

 

thanjavur district statue incident

 

உடன்பிறந்த தங்கையின் இந்த மனவருத்தத்தை முழுமையாக சரிசெய்ய முடியாது என்றாலும், நம்மால் முடிந்ததை செய்யலாம் என முடிவெடுத்த லட்சுமி பிரபாவின் சகோதரிகள், 6 லட்சம் ரூபாய் செலவு செய்து சிலிகான் மெட்டிரியலில் தந்தை செல்வத்தின் தத்ரூப சிலையைச் செய்து கொண்டுவந்து மணமேடையில் வைத்து, மணமகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தனர்.

 

அப்பா அருகில் இல்லையே என ஏங்கிய மணப்பெண்ணின் மனக்கவலையைப் போக்கும் விதத்தில், தந்தையின் தத்ரூப சிலை அருகில் தாயையும் நிற்கவைத்து மணமக்கள்,  மாலை மாற்றி திருமணம் செய்து, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.