Advertisment

நாகையில் நகைக்கடையின் பக்கவாட்டு சுவர் உடைக்கப்பட்டு கொள்ளை;போலீசார் விசாரணை!

நகை மாவட்டம் சீர்காழியை அடுத்த புத்தூர் கடைவீதியில் சிவபுரி என்பவர் திருப்பதி என்ற பெயரில்வைத்திருந்த நகை அடகுகடையில் ஒரு கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisment

 The side wall of a jewelry shop was broken into and looted

கடந்த 10 வருடங்களாக கடைவைத்துள்ள சிவபுரி நேற்று இரவுவழக்கம்போல் கடையை மூடிவிட்டு இன்று மதியம் 12 மணி அளவில் மீண்டும் கடையை திறக்கும்பொழுது கடையில் பக்கவாட்டு சுவர் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

Advertisment

 The side wall of a jewelry shop was broken into and looted

இதனைக்கண்டு அதிர்ந்த சிவபுரி அருகில் உள்ள கொள்ளிடம் போலீசாரிடம் புகாரளிக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நகை திருடுபோன அந்த கடையை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

nagai Investigation police Theft jewel shop
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe