Advertisment

குரூப் 4 தேர்வு முறைகேடு: உயர் அதிகாரிகளின் டிரைவர் சித்தாண்டி கைது என தகவல்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த குரூப்-4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்ததையடுத்து, டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நடத்திய விசாரணையில் அந்தத் தேர்வில் தவறுகள் நடந்திருப்பது உறுதியானது.

Advertisment

 siddhaandi-tnpsc-results-issues

அதன்படி, 99 தேர்வர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை டி.என்.பி.எஸ்.சி. கண்டுபிடித்தது. அவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இடைத்தரகர்களையும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கையில் சித்தாண்டி என்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்தாண்டி டி.என்.பி.எஸ்.சி. உயரதிகாரிகளுக்கு டிரைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

police tnpsc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe