Skip to main content

தம்பி கொலை அண்ணன் கைது...

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

siblings prob brother arrest

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது அண்ணமங்கலம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, இவருக்கு சந்திரா வாசுகி என்ற இரு மனைவிகள். ஏழுமலையின் முதல் மனைவி சந்திரா இறந்துவிட்டார். முதல் மனைவி சந்திராவுக்கு ராமதாஸ் உமா மகேஸ்வரி என்ற ஒரு மகன், மகள் உள்ளனர். இரண்டாவது மனைவி வாசுகிக்கு கலைச்செல்வன் கலைமணி ஆகிய இரு மகன்கள் உள்ளனர் ஏழுமலைக்குசொந்தமாக சுமார் 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.


இதில் 10 ஏக்கர் நிலத்தை கலைச்செல்வனும் இரண்டு ஏக்கர் நிலத்தை முதல் மனைவி சந்திராவின் மகன் ராமதாஸ் அனுபவித்து வந்தனர் இரண்டு பேருமே சென்னையில் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளனர். இந்தநிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான அண்ணமங்கலத்திற்கு வந்து குடும்பத்துடன் தங்கி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கலைச்செல்வன் தனது வீட்டருகே பாத்ரூம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வந்துள்ளார் இது சம்பந்தமாக அண்ணன் தம்பி இருவருக்கும் பிரச்சனை எழுந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கலைச்செல்வன் பாத்ரூம் கட்ட ஏற்பாடு செய்துள்ள அந்த இடத்தில் தமக்கும் பங்கு உள்ளது எனக் கூறியுள்ளார் ராமதாஸ். இதனால் ராமதாஸுக்கும், கலைச்செல்வனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராமதாஸ் மற்றும் அவரது மகன்கள் இரண்டு பேரும் சேர்ந்து கலைச்செல்வனை ஈட்டி மற்றும் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் கலைச்செல்வன் இறந்து போனார் இதையடுத்து  கலைச்செல்வன் மனைவி காயத்ரி  வளத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில்  அடிப்படையில் போலீசார் ராமதாஸ் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ராமதாஸ் மற்றும் அவரது  இரண்டு மகன்கள் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். சூரியபிரகாஷ் தலைமறைவாகியுள்ளார் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

அண்ணன்-தம்பி இடப்பிரச்சனையில் நடந்துள்ளது இந்த கொலை. கிராமப்புறங்களில் ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்களுக்கும், உறவினர்களுக்கும் இதுபோன்ற நிலப்பிரச்சனை இடப்பிரச்சனை வருவது சகஜமான ஒன்றுதான், அப்படிப்பட்டவர்கள் ஊரில் உள்ள பெரிய மனிதர்களை அழைத்து பேசி அவர்கள் மூலம் தீர்வு கண்டிருக்கலாம் அல்லது வருவாய்த்துறை மூலம் அந்த இடத்தை அளந்து முறையாக யாருக்கு எவ்வளவு என்பதை அடையாளப்படுத்தி இருக்கலாம். அதை விட்டுவிட்டு ஒரு தந்தைக்கு பிறந்த இரு மகன்கள் கொஞ்ச இடத்திற்காக சண்டையிட்டு அது கொலையில் போய் முடிந்துள்ளது வேதனை அளிக்கிறது என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.