Skip to main content

தேசியக் கொடியை அவமதித்த எஸ்.ஐ.! நடவடிக்கை எடுத்த ஆணையர் 

Published on 23/10/2023 | Edited on 23/10/2023

 

SI insulted the national flag! Commissioner who took action

 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டி இன்று நடைபெறுகிறது. இதில், பாகிஸ்தா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதற்காக ரசிகர்கள் இன்று பிற்பகல் வேளையில் மைதானத்திற்கு வருகை தந்தனர். வருகை தந்த ரசிகர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 

 

அப்போது ரசிகர் ஒருவர் இந்திய தேசியக் கொடியுடன் மைதானத்திற்குவந்தார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர், அந்த ரசிகரிடம் இருந்து தேசியக் கொடியை பிடுங்கி அதனை குப்பைத் தொட்டியில் போட முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக அந்த உதவி ஆய்வாளர் தேசியக் கொடியை கையில் வைத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. 

 

இந்நிலையில், தேசியக் கொடியை குப்பைத் தொடியில் வீச முயன்ற உதவி ஆய்வாளரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்