Skip to main content

எஸ்.ஐ. தேர்வு: நீதிமன்றத்தை அவமதிப்பு செய்கிறதா தேர்வாணையம்

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

SI Exam, whether contempt of court

 

 

தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும்  969 காலி பணியிடங்களுக்கான காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு அறிவிப்பை 2019 மார்ச் மாதம் வெளியிட்டு, ஜனவரி 12, 13 தேதிகளில் தேர்வுகள் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மார்ச் 16 தேதி வெளியானது. இதில் ஒரே தேர்வு மையத்தில் இருந்தே அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

 

குறிப்பாக ஒரே தேர்வுமையத்தில் 969 காலிப்பணியிடங்களுக்கு ஒரே பயிற்சி மையத்தில் 144 பேர் தேர்ச்சி பெற்று பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட தேர்வுகளில் நடந்ததைப்போல் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாகவும் இத்தேர்வை ரத்து செய்து மறுத்தேர்வை நடத்தவேண்டும் எனவும் கோரிக்கையை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளனர்.

 

அதன்படி மதுரை உயர்நீதிமன்றம் 17ஆம் தேதி நிபுணர் குழு அமைத்து  இத்தேர்வு நடந்த முறை சரியான முறையில்தான் நடந்ததா இல்லை தவறான முறையில் நடந்ததா என்பதை தெரிவிக்க சொன்ன நிலையில் இதுவரையில் அதைப் பற்றி எந்த தகவலும் அறிவிக்காமலே 04ஆம் தேதி அன்று  திருச்சியில் எஸ்.ஐ தேர்வுக்கான உடல் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.  

 

இன்று  எஸ்.ஐ. தேர்வில் எழுதிய மாணவர்கள் பத்திரிகையாளர்களை சந்திப்பில் இச்செய்தியை தெரிவித்தனர். மேலும் நக்கீரன் தான் இந்த எஸ்.ஐ. தேர்வு முறைகேடுகளை ஆதாரத்துடன் வெட்ட வெளிச்சமாக காட்டியது. அதற்கு எங்களது நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இத்தேர்வின் நிபுணர் குழு தேர்வு சரியாக நடத்தப்பட்டதா என்ற தகவலை தெரிவிக்காமல் உடல் தகுதி தேர்வை நடத்தக்கூடாது  என தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.