சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பொழிந்து வருகிறது.

சென்னை தி நகர், சைதாப்பேட்டை, நந்தனம், அசோக் நகர், அடையாறு, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. அதேபோல் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, கோபாலபுரம், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

Advertisment

 Showers in many place of Chennai

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளநிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.