Shouted the old man ... rescued firefighters

Advertisment

திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுக்கையைவிட்டு எழுந்திருக்க சிரமப்பட்ட முதியவர் தவறுதலாக வீட்டின் உள்தாழ்ப்பாள் போட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவமனைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வர முயன்ற அவரால் உள்தாழ்ப்பாள் திறக்க முடியாமல் சிரமப்பட்டு கூச்சலிட்டுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் அவரது சத்தத்தைக் கேட்டு தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் வீட்டிற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அவரைப் பத்திரமாக மீட்டனர்.