நெல்லை மாவட்டத்தின் அருவிகளின் நகரமான குற்றாலத்தில் வருடம் தோறும் அருவிச் சீசன் காலங்களில் அங்குள்ள அரசு கலைவாணர் அரங்கில் நடைபெறும் சாரல் விழா ஒரு வாரம் வரை நடக்கும். மாலையில் அன்றாடம் கலை நிகழ்ச்சிகள், பண்பாட்டு நடனங்கள் பாரம்பரியக் கலைகள் என விழா களை கட்டுவது வழக்கம் ஆனால் சாரல் விழா என்று பெயர் கொண்டாலும், இதற்கு முன்பு நடத்தப்பட்ட சாரல் விழாக்களில் கூடிய மட்டிலும் சாரல் இருக்காது மிஸ்ஸாகி விடும்.
ஆனாலும் வாராத மாமணியாய் இயற்கையின் அருட்கொடை ஆறு வருடங்களுக்குப் பின்பு இந்த வருடம் தாராளமாக குற்றாலப் பகுதிக்குக் கொடையைக் கொடுத்தது. சீசன் ஆரம்பகாலமான மே மாதம் தொடங்கி தற்போது வரை அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.
ஏழு நாட்களாக நடந்த சாரல் விழா பண்பாட்டு நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைந்தது.
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்