Skip to main content

சுற்றுலா பயணிகளைக் கவர பரங்கிப்பேட்டையில் நீர் விளையாட்டு வளாகம்!!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

"This should be put to good use by the public in this area" - Municipal Executive Officer

 

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பேரூராட்சி உள்ளது. இந்த ஊர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முக்கிய கப்பல்துறைமுகமாக விளங்கியுள்ளது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலையும் இங்குதான் நிறுவப்பட்டது. கி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவு போர்க்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளன. பாபா கோயிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தினால் நிறுவப்பட்ட கடல் வாழ் உயராய்வு மையமும் இங்கு உள்ளது. இதிலுள்ள கடல்சார் அருங்காட்சியகம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு  பயனுள்ளதாக உள்ளது.

 

அதேபோல, பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் மீன்பிடி இறங்குதளத்தில் பிடிக்கப்படும் மீன்கள் அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்படி பெருமை வாய்ந்த பரங்கிப்பேட்டையில் பேரூராட்சி சார்பில் ரூ 60 லட்சம் மதிப்பில் பரங்கிப்பேட்டை நீர் விளையாட்டு வளாகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் கடந்த 2 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் 80 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள 20 சதவீத பணிகள் இன்னும் 15 தினங்களில் முடிவு பெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த நீர் விளையாட்டு வளாகத்தில் படகு குழாம், சிறுவர் பூங்கா, மிதவை பாலம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது. சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமில்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக படகு குழாமில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

 

"This should be put to good use by the public in this area" - Municipal Executive Officer

 

இதுகுறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர்  சீனிவாசன் கூறுகையில், “சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் முயற்சியின் பேரில் பரங்கிப்பேட்டை நீர் விளையாட்டு வளாகம் பணிகள் நடைபெற்று வருகிறது. இது உள்ளூர் மக்கள் மட்டுமில்லாமல் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் விதத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் இதனைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வளாகம் செயல்பாட்டுக்கு வந்தால் இப்பகுதி மேம்படும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.