Skip to main content

சென்னையில் ரங்கநாதன் தெரு உட்பட 9 இடங்களில் கடைகள் மீண்டும் செயல்பட அனுமதி!

Published on 09/08/2021 | Edited on 09/08/2021

 

hjk

 

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக இரண்டு வாரத்திற்குத் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் 9 இடங்களில் அங்காடிகள், வணிக வளாகங்கள் செயல்பட தடை விதித்து அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அந்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.  அதன்படி சென்னையில் டி.நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, ஜாம்பஜார் உள்ளிட்ட 9 இடங்களில் வணிக வளாகங்கள் வழக்கம்போல் செயல்பட துவங்கியுள்ளன. இந்தக் குறிப்பிட்ட இடங்களில் நேரக் கட்டுப்பாடுகள், கரோனா விதிமுறைகள் ஆகியவை தொடர்ந்து கவனிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்