Skip to main content

குட்கா விசாரணையில் பிடிபட்டவர்  போக்சோவில் கைது! 

Published on 31/08/2021 | Edited on 31/08/2021

 

Shop owner arrested under pocso in chennai

 

சென்னையில் 4 வயது சிறுமி முதல் 17 வயது சிறுமி வரை 5 சிறுமிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்களும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சென்னை, டி.பி.சத்திரம், ஆர்.வி. நகர் 1-வது தெரு பகுதியில் மாரியம்மன் கூல் பார் என்ற பெயரில் பெட்டி கடை நடத்தி வருபவர் பெருமாள். இவரது கடையில் குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக டி.பி.சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவரின் கடையை போலீஸார் சோதனை செய்தனர். அச்சோதனையில், கடையில் 30 கிலோ குட்கா பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், பெருமாளை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

 

மேலும் குட்காவை எங்கிருந்து வாங்குகிறார் என்பதை தெரிந்து கொள்ள செல்போனை கேட்ட பொழுது அதனை தரமறுத்ததால் போலீசாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டு செல்போனை ஆய்வு செய்த பொழுது அதிர்ச்சி காத்திருந்தது. அதில், பெருமாள் சிறுமிகள் பலருக்கு பாலியியல் துன்புறுத்தல் செய்து அதனை வீடியோவாக பதிவுசெய்து வைத்து இருந்தார்.

 

சிறுமிகளின் வீடியோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்திற்கு தகவல் அளித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை மீட்டு அவர்களிடம் அது குறித்து கேட்ட பொழுது மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.

 

கீழ்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவரது தாய்க்கு தெரிந்தே இந்த பாலியியல் கொடுமைகள் நடந்துள்ளதும், அச்சிறுமியின்  தாய் பெருமாளுடன் கடந்த 2 வருடமாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததும், பின்னர் காலப்போக்கில் அவரது சகோதரியுடனும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தால் 9 வயது மகளையும் பெருமாள் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் தாய், பெருமாளுடனான தவறானத் தொடர்பை துண்டிக்க முடியாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது மகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை அனுமதித்துள்ளார். பெருமாளின் பாலியல் சீண்டல்கள் எல்லை மீறி சிறுமியின் வீட்டுக்கு வரும் சிறுமியின் தோழிகளான 11 வயது மற்றும் 4 வயது சிறுமிகளையும் துன்புறுத்தல் செய்து வந்துள்ளான். இத்தனை கொடுமைகளும் பெருமாளுடன் தொடர்பில் இருந்த சகோதரிகள் வீட்டில் நடந்துள்ளது. 

 

இதன் பிறகு போலீஸ் விசாரணையில் அந்த நபருடன் தொடர்பில் இருந்த பெண்ணின் 9 வயது மகள் மற்றும் அயனாவரம் மார்கெட் அருகில் பூ வியாபாரம் செய்பவரின் 4 வயது சிறுமி முதல் 17 வயது சிறுமி வரை 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மேலும் சிறுமிகளை பாலியியல் கொடுமை செய்வதற்கு 500 முதல் 2 ஆயிரம் வரையிலும் பணம் கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக பெருமாள் உட்பட மூவர் மீது போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம், பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பெருமாள் சைதாப்பேட்டை சிறையிலும், அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்கள் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த இளைஞர்; காத்திருந்து அவமானப்படுத்திய கிராம மக்கள்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 The family was dragged in a procession wearing sandal garlands and Youth arrested in POCSO case

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், தொட்டவாடா கிராமத்தில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு, 18 வயதுக்குட்பட்ட ஒரு மகள் இருக்கிறார். அந்த சிறுமி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த அணில் மூக்னாவர் என்ற வாலிபர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, அந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பைலேஒங்கலா புறநகர் போலீசார், வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர். அதன் பின்னர், அந்த வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஹிண்டல்கா சிறையில் அடைத்த்னார். 4 மாதங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை சில தினங்களுக்கு முன்பு, வாலிபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்து தனது கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது, வாலிபர் கிராமத்திற்குள் வந்ததை அறிந்த சிறுமியின் குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக இழுத்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சிறுமியின் குடும்பத்தினர் வாலிபரின் கையை துணியால் கட்டி செருப்பால் அடித்தும், அவருக்கு செருப்பு மாலை அணிவித்தும் கிராமத்திற்குள் ஊர்வலமாக இழுத்து வருகின்றனர். அவர்களோடு, அந்த கிராம மக்களும் உடன் வருகின்றனர். இதனை அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர், தங்கள் செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. 

Next Story

11 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Tragedy of 11-year-old girl; Police serious investigation

மதுரை மாவட்டம் கூடல் புதூர் என்ற பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தான் வசித்து வந்த வீட்டின் கழிவறையில் மயங்கிய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று (21.03.2024) அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சிறுமியின் வீட்டிற்கு வந்த தடயவியல் ஆய்வாளர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதே சமயம் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான முடிவு வெளியானது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் மரணம் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு  தற்போது போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றி விசாரணையை மதுரை மாநகர போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.