மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் சக்திவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று மதுரையில் தோப்பூர் மற்றும் மேல அனுப்பானடி,வில்லாபுரம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தற்போது திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபம் அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் வந்த சிறிது நேரத்திலேயே பாஜகவை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர்.
குவிந்த அந்த இளைஞர்கள் கமலஹாசன் மீது காலணிகளை வீசி எறிந்தனர். அந்த இளைஞர்களை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தினர்.இதனால் அங்கு சற்று பதற்றம் நிலவியது.
ADVERTISEMENT
Show comments