Skip to main content

நைட்டியுடன் பெண்கள் உள்ளாடைகளை திருடும் நூதன சைக்கோ... சிசிடிவி காட்சியால் பதறும் பொதுமக்கள்! 

Published on 22/01/2020 | Edited on 22/01/2020

 

மீனாட்சி கார்டன்  பகுதியில் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் பெண்களின்  செருப்புகளை மட்டும் குறிவைத்து திருடும் சைக்கோ திருடனால் குடியிருப்புவாசிகள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை துடியலூர் மீனாட்சி கார்டன் குடியிருப்பில் சுமார் 250 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் சமீபகாலமாக சுற்றி திரியும் நபர் ஒருவர் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் பெண்களின் செருப்பு போன்றவற்றை திருடுவதை  வாடிக்கையாக  கொண்டு இருக்கின்றார். உள்ளாடைகளும் , செருப்பும் மட்டும் திருடும் இந்த சைகோ திருடனால் இந்த குடியிருப்பு வாசிகள் பதற்றமடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஒரே நேரத்தில் உள்ளாடைகளும், செருப்பும் காணாமல் போனது. தேடிப் பார்த்த போது ஆளில்லாத ஒரு வீட்டில் செருப்புகளும், உள்ளாடைகளும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து போது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் கடந்த 17 ம் தேதி மீண்டும் இது போன்று பெண்களின் உள்ளாடைகள், செருப்பு போன்றவை திருடப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது திருடன் வந்து இவற்றை திருடி சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் பெண்கள் அணியும் நைட்டி உடை அணிந்து திருடி செல்வதும் இந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி  இருக்கின்றது. குடியிருப்புவாசிகள் இதுகுறித்து  துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்