Shocking confession of incident baby girl mother

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கட்டைப்பையில் இறந்த நிலையில் பெண் குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை ஈஞ்சம்பாக்கம் செல்வா நகரைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநரான அருண். அவருடைய மனைவி பாரதி. இந்த தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தநிலையில் நேற்று ஒரு பெண் குழந்தை காணாமல் போனதாக குழந்தையின் தாய் பாரதி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அப்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாய் பாரதியே பிறந்து 43 நாட்களே ஆன பெண் குழந்தை இரண்டாவது மாடியிலிருந்து வீசி கொன்றதும், குழந்தையைக் கொன்றுவிட்டு காணவில்லை என உறவினர்களிடம்நாடகமாடியதும் தெரிந்தது.

தொடர்ந்து கட்டைப்பையில் இறந்த நிலையில் குழந்தையின் உடலானது கைப்பற்றப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு குழந்தைகளும் அடிக்கடி அழுது கொண்டே இருந்ததால் தூக்கம் இன்றி தவித்ததாகவும், குழந்தைகளை கவனிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்ததால் இரண்டாவது மாடியில் இருந்து ஒரு குழந்தையை மட்டும் கீழே தூக்கி வீசியதாக கைது செய்யப்பட்ட பெண் பாரதி தெரிவித்துள்ளார்.