Skip to main content

நிலத்தை அபரிக்க எய்ட்ஸ் வரவைத்தார்களா ? – அதிர்ச்சி குற்றச்சாட்டு! தீவிரம் காட்டுவார்களா அதிகாரிகள்!

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலத்தை அடுத்த ஈசன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் வெங்கடேசபெருமாள். 18 வயதாகும் இந்த இளைஞன் சரியாக பேசவராது, அவனது செய்கை மூளை வளர்ச்சி குன்றியதை போல் இருக்குமாம். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இந்த இளைஞனுக்கு சமீபத்தில் கிராமத்திலேயே ஒருவரிடம் ஊசி போட்டுள்ளனர். ஊசிப்போட்டயிடம் வீங்கி, கட்டியாகியுள்ளது.

 

shocking accusation! The authorities will show intensity




அந்த கட்டியை அகற்ற வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு ரத்த பரிசோதனை செய்துள்ளனர். ரத்தத்தில் எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதுப்பற்றி வெங்கடேசபெருமாளின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

 
இதனால் அதிர்ச்சியான வெங்கடேசபெருமாளின் பெற்றோர் இது தொடர்பாக ஜீன் 11ந்தேதி மதியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து என் மகனுக்கு எய்ட்ஸ் ரத்தம் கலந்த ஊசிப்போட்டு எய்ட்ஸ் வரவைத்துள்ளார்கள் என்கிற பகீர் குற்றச்சாட்டை கூறினர்.


இது தொடர்பாக நாம் அவரிடம் பேசியபோது, எனக்கும் எங்களது உறவினர்களுக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது. எனக்கு சொந்தமாக 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை விலைக்கு தாங்கள் என எங்கள் உறவினர் சார்பாக எங்கள் ஊரை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் செல்வகுமார் வந்து விலைக்கு கேட்டார். நான் தரமுடியாது எனச்சொல்லிவிட்டேன்.




இதில் கோபமான எங்களது உறவினர்களும், செல்வகுமாரும் சேர்ந்து எனது மகனுக்கு எய்ட்ஸ் நோய் கிருமியுள்ள ஊசியை போட்டுவிட்டார்கள். இதை நான் ஏன் உறுதியாக கூறுகிறேன் என்றால், என் மகனுக்கு எய்ட்ஸ் என உறுதியானதும், எனக்கும், என் மனைவிக்கும் பரிசோதனை செய்தார்கள். எங்களுக்கு அந்த நோய் கிடையாது.

 

shocking accusation! The authorities will show intensity



எங்கள் மகனுக்கு அடிக்கடி செல்வகுமாரிடம் தான் ஊசிப்போடுவோம், அவன் டிரைவர் வேலைக்கு செல்வதற்கு முன்பு ஊர், ஊராக சென்று ஊசி போடும் வேலை தான் செய்து வந்தான். எங்கள் மகனுக்கு அவனை தவிர வேறு யாரிடமும் நாங்கள் ஊசிப்போட்டதில்லை. அதனால் தான் உறுதியாக கூறுகிறோம் என்றார்.




இதுதொடர்பாக எஸ்.பி அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர் போலிஸார். சுகாதாரத்துறையோ இது தொடர்பாக இதில் தீவிரமாக கவனம் செலுத்தாமல் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.


 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.