Skip to main content

9 நாட்கள் குடிநீர்த் தேக்கத் தொட்டியில் மிதந்த அழுகிய சடலம்; தெரியாமல் நீரைப் பயன்படுத்திய மக்கள்

Published on 31/01/2023 | Edited on 01/02/2023

 

Shocked as the body floated in the drinking water tank

 

விருதாச்சலம் அருகே பொதுமக்கள் பயன்படுத்திய குடிநீர்த் தேக்கத் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தை சேர்ந்த சிவசங்கரன் என்பவரின் மூன்றாவது மகனான சரவணகுமார் கடந்த 9 நாட்களாக காணவில்லை. இதன் காரணமாக அவரது உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் பட்டியலின மக்கள் தாங்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு வரும் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக ஊராட்சி நிர்வாகத்திடம் இன்று புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் ஊராட்சி நிர்வாக ஊழியர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றனர். அப்போது மேலே சென்று பார்த்தபோது குடிநீர் தொட்டிக்குள் துர்நாற்றத்துடன் அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  

 

இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் தீயணைப்பு துறை உதவியுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படையினர் முதலில் நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்த தண்ணீரை முழுவதும் வெளியேற்றிவிட்டு, தொட்டியில் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கயிறு கட்டி மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், நீர்த்தேக்கத் தொட்டியில் சடலமாகக் கிடந்தது கடந்த ஒன்பது நாட்களாக காணாமல் போன சிவசங்கரின் மகன் சரவணக்குமார் என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

கடந்த 9 நாட்களாக, சம்பந்தப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டியின் குடிநீரைத் தான் அக்கிராமத்தில் உள்ள அனைவரும் உணவு சமைப்பதற்காகவும், குடிநீராகவும் பயன்படுத்தி உள்ளனர். சடலம் கிடந்த தொட்டியில் இருந்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி உள்ளதால், மருத்துவக் குழு அமைத்து அக்கிராம மக்களை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீர் செல்லும் பைப் லைனை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க வேண்டுமெனவும் அக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சரவணக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் அழுகிய நிலையில் சடலம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.