Skip to main content

கொங்கு மண்டலத்தில் முதல்வர் எடப்பாடிக்கு "ஷாக்" ட்டீரிட்மென்ட்

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக அணி வெற்றி வாகை சூடி வருகிறது. இந்த நிலையில் அதிமுக தரப்பு மிகவும் எதிர்பார்த்த பகுதி என்றால் அது கொங்கு மண்டலம்.இங்கு தான் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் காலம் தொடங்கி ஜெயலலிதா காலம் வரை அதிமுக மிகவும் வலுவாக இருந்தது.

 

ஜெ. மறைவுக்குப் பிறகும் கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்று அக்கட்சியின் நிர்வாகிகள் கூறிவந்தனர். இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கொங்கு மண்டலமும் அதிமுகவுக்கு முன்பு வலு சேர்த்ததோ அதே கொங்கு மண்டலம் இப்போது அதிமுகவை புரட்டிப்போட்டு திமுகவுக்கு பலமான வலுவை கொடுத்துள்ளது.

 

edappadi

 

குறிப்பாக கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் என இந்த கொங்கு மண்டலப் பகுதிகளில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு சதவீதம் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் வரை கூடுதலாக வந்திருக்கிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வை விட திமுக 40 ஆயிரம் வாக்குகள் கூடுதல் பெற்று இருப்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு அரசியல் பார்வையாக இருக்கிறது. 

 

 

இந்த சூழலில் கண்டிப்பாக கொங்கு மண்டலத்தில் 5 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி ஆகியோர் உறுதியாக நம்பியதோடு கட்சி நிர்வாகிகளிடம் அவர்கள் கூறிவந்தனர். ஆனால் நடந்ததோ இந்த கொங்கு மண்டலத்தில் அதிமுக தனது பலத்தை முழுமையாக இழந்துள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த அதிர்ச்சியில் இருக்க, அமைச்சர் வேலுமணி மற்றும் தங்கமணியிடம் எப்படி இப்படி தோல்வியை கொங்கு மண்டலம் நமக்கு இப்படி பரிசாக  கொடுத்து விட்டதே என கூற அவர்கள் இருவரும் இங்கு முழுமையாக மோடி எதிர்ப்பு மட்டுமே வேலை செய்து விட்டது அதை திமுக சாதகமாக அரசியலில் பயன்படுத்தி விட்டது என்று தங்கமணியும் வேலுமணியின் கூறியிருக்கிறார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஐயோ எனக்கு இது அதிர்ச்சி மட்டுமில்ல மிகவும் ஷாக்காக உள்ளது எனக் கூறியிருக்கிறார். 

 

 

பொதுவாக இந்த மண்டலத்தில் அதிமுக கூடுதல் இடங்களை பெறும் என்று கருத்துக் கணிப்புகளில் மற்ற ஊடகங்களில் கூறிய போதும் நமது நக்கீரனில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என தொடக்கத்திலிருந்தே எழுதி வந்தோம் தற்போதும் அதே நடந்துள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.