Skip to main content

எனது கணவரை விட அந்த அம்மாவுக்கு 14 வயது அதிகம்... திமுக பிரமுகரின் மனைவி பரபரப்பு புகார்...

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

வாணியம்பாடியைச் சேர்ந்த திமுக பிரமுகர் சாரதிக்குமார் என்பவரின் மனைவி சென்னை போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ''வாணியம்பாடி நகர திமுக பொறுப்பாளர் சாரதிக்குமாரின் மனைவி நான். என்னுடைய பெயர் ரம்யா. நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆனால் அவருக்கு வேறொருவரிடம் தொடர்பு இருந்திருக்கிறது. அது எனக்கு தெரியவே தெரியாது. அந்த அம்மா எனது கணவரைவிட 14 வயது மூத்தவர். அவரை அக்கா, அக்கா என்று எனது கணவர் அழைத்து வந்ததால் தவறாக நான் நினைக்கவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல்தான் அக்கா முறை இல்லை, வேறு மாதிரியான ரிலேஷன்சிப் இருக்கிறது என்று எனக்கு தெரிய வந்தது. இதுதொடர்பாக எனது கணவரிடம் கேட்கும்போது, தவறாக ஒன்றும் நடக்கவில்லை என்று கூறிவந்தார். 

 

vaniyambadi




அந்த அம்மா எப்படி என்றால், அவர் வீட்டுக்கு வந்துவிடுவார் இல்லையென்றால் அவரது வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போய்விடுவார். படுப்பது கூட பார்த்தீர்கள் என்றால், எனது கணவர் நடுவில் படுத்தால், நான் இந்தப் பக்கம் படுக்கணும், அந்த அம்மா அந்தப் பக்கம் படுக்கணும். அவர்கள் இரண்டு பேரும் கட்டிப்பிடித்து படுப்பார்கள். அதனை கேட்டால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நீ தான் தப்பா நினைக்கிற என்பார்கள். அடிப்பார்கள். ஒரு படத்திற்கு போனால்கூட நடுவில் எனது கணவர் இருப்பார். இந்தப் பக்கம் நான் இருப்பேன். அந்தப் பக்கம் அந்த அம்மா இருப்பார். இதைக்கேட்டால் மிரட்டுவார்கள். 

 

vaniyambadi



 

இந்த நேரத்தில்தான் எனக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். அதற்கு பிறகு அந்த அம்மா அவரது அக்கா மகளை, 18 வயதே ஆன அவரது அக்கா மகளை கோயம்பத்தூருக்கு அழைத்துச் சென்று ரூம் போட்டு அட்வைஸ் செய்திருக்கிறார். அவனை சந்தோஷமா பாத்துக்கோ, எப்படி அவனை பாத்துக்கணும் என அட்வைஸ் பண்ணியிருக்காங்க. இதெல்லாம் எனக்கு தெரிஞ்சப் பின்னர் என்னை மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.


 

vaniyambadi



எனக்கும், எனது குழந்தைக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக கட்சி மேலிடத்திலும் சொல்லியிருக்கேன். நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதை எப்படியோ தெரிந்து கொண்டு என்னை மிரட்டினார்கள். அதனால்தான் உரிய நடவடிக்கை எடுக்கணும் என்று கமிசனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன் என்றார்.


 

 

கேள்வி : ஏற்கனவே புகார் கொடுத்திருக்கிறீர்களா?
 

பதில் : புகார் கொடுத்திருக்கிறோம். அவர் கட்சிப் பொறுப்பில் உள்ளால் நடவடிக்கை எடுக்கவில்லை.
 

கேள்வி : கட்சித் தலைவரிடம் புகார் கொடுத்திருக்கிறீர்களா?
 

பதில் : சமீபத்தில்தான் கொடுத்தோம். நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதற்குள் இவர்கள் தலைமை வரை போவதற்கு உனக்கு தைரியம் வந்துவிட்டதா என்று மிரட்டுகிறார்கள். 

 

vaniyambadi


 

கேள்வி : அந்த பெண்ணின் சகோதரர் எஸ்.பி.யாக இருப்பதாக சொல்கிறார்களே?
 

பதில் : ஆமாம். அவரிடமும் சொன்னோம். அவரும் இரண்டு பேரிடமும் பேசிப் பார்த்தார். கண்டித்துப் பார்த்தார். ஆனால் அவர்கள் இருவரும் கேட்கவில்லை. அதற்குப் பிறகு உன்னையும், உன் குழந்தையையும் காப்பாற்றிக்கொள் என கூறிவிட்டார். 
 

கேள்வி : அவர் எங்கு எஸ்.பி.யாக இருக்கிறார்?
 

பதில் : அவர் சி.எம். செல்லில்தான் இருக்கிறார்.


 

vaniyambadi



கேள்வி : என்ன சொல்லி மிரட்டுகிறார்?
 

பதில் : கல்யாணம் பண்ணும்போது 130 சவரன் நகை போட்டாங்க. அந்த நகைகளை எல்லாம் வைத்துவிட்டார்கள். அதனுடைய காசெல்லாம் அந்த அம்மாவிடம் தான் இருக்கிறது. எங்க வீட்டுல காசு கொடுத்தாங்கன்னா, அதை அப்படியே கொண்டுபோய் அந்த அம்மாகிட்ட கொடுத்துவிடுவார். என்னை யாரும் எதுவும் பண்ண முடியாது என்று மிரட்டுவார். அவர்கள் பேசிய ஆடியோ வைத்திருக்கிறேன். அப்படி ஆபாசமாக பேசுவார்கள். இதைவிட்டு வெளியே போனால் எனக்கும், எனது குழந்தைக்கும் பாதுகாப்பு இருக்குமா என்று தெரியவில்லை. அந்த ஆடியோவை கேட்டீர்கள் என்றால் தெரியும். என்னிடம் அவ்வளவு ஆதாரம் இருக்கிறது. ஆனால் அவர் பொறுப்பில் இருப்பதால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். 


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.