Skip to main content

எனது கணவரை விட அந்த அம்மாவுக்கு 14 வயது அதிகம்... திமுக பிரமுகரின் மனைவி பரபரப்பு புகார்...

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

வாணியம்பாடியைச் சேர்ந்த திமுக பிரமுகர் சாரதிக்குமார் என்பவரின் மனைவி சென்னை போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ''வாணியம்பாடி நகர திமுக பொறுப்பாளர் சாரதிக்குமாரின் மனைவி நான். என்னுடைய பெயர் ரம்யா. நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆனால் அவருக்கு வேறொருவரிடம் தொடர்பு இருந்திருக்கிறது. அது எனக்கு தெரியவே தெரியாது. அந்த அம்மா எனது கணவரைவிட 14 வயது மூத்தவர். அவரை அக்கா, அக்கா என்று எனது கணவர் அழைத்து வந்ததால் தவறாக நான் நினைக்கவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல்தான் அக்கா முறை இல்லை, வேறு மாதிரியான ரிலேஷன்சிப் இருக்கிறது என்று எனக்கு தெரிய வந்தது. இதுதொடர்பாக எனது கணவரிடம் கேட்கும்போது, தவறாக ஒன்றும் நடக்கவில்லை என்று கூறிவந்தார். 

 

vaniyambadi




அந்த அம்மா எப்படி என்றால், அவர் வீட்டுக்கு வந்துவிடுவார் இல்லையென்றால் அவரது வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போய்விடுவார். படுப்பது கூட பார்த்தீர்கள் என்றால், எனது கணவர் நடுவில் படுத்தால், நான் இந்தப் பக்கம் படுக்கணும், அந்த அம்மா அந்தப் பக்கம் படுக்கணும். அவர்கள் இரண்டு பேரும் கட்டிப்பிடித்து படுப்பார்கள். அதனை கேட்டால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நீ தான் தப்பா நினைக்கிற என்பார்கள். அடிப்பார்கள். ஒரு படத்திற்கு போனால்கூட நடுவில் எனது கணவர் இருப்பார். இந்தப் பக்கம் நான் இருப்பேன். அந்தப் பக்கம் அந்த அம்மா இருப்பார். இதைக்கேட்டால் மிரட்டுவார்கள். 

 

vaniyambadi



 

இந்த நேரத்தில்தான் எனக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். அதற்கு பிறகு அந்த அம்மா அவரது அக்கா மகளை, 18 வயதே ஆன அவரது அக்கா மகளை கோயம்பத்தூருக்கு அழைத்துச் சென்று ரூம் போட்டு அட்வைஸ் செய்திருக்கிறார். அவனை சந்தோஷமா பாத்துக்கோ, எப்படி அவனை பாத்துக்கணும் என அட்வைஸ் பண்ணியிருக்காங்க. இதெல்லாம் எனக்கு தெரிஞ்சப் பின்னர் என்னை மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.


 

vaniyambadi



எனக்கும், எனது குழந்தைக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக கட்சி மேலிடத்திலும் சொல்லியிருக்கேன். நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதை எப்படியோ தெரிந்து கொண்டு என்னை மிரட்டினார்கள். அதனால்தான் உரிய நடவடிக்கை எடுக்கணும் என்று கமிசனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன் என்றார்.


 

 

கேள்வி : ஏற்கனவே புகார் கொடுத்திருக்கிறீர்களா?
 

பதில் : புகார் கொடுத்திருக்கிறோம். அவர் கட்சிப் பொறுப்பில் உள்ளால் நடவடிக்கை எடுக்கவில்லை.
 

கேள்வி : கட்சித் தலைவரிடம் புகார் கொடுத்திருக்கிறீர்களா?
 

பதில் : சமீபத்தில்தான் கொடுத்தோம். நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதற்குள் இவர்கள் தலைமை வரை போவதற்கு உனக்கு தைரியம் வந்துவிட்டதா என்று மிரட்டுகிறார்கள். 

 

vaniyambadi


 

கேள்வி : அந்த பெண்ணின் சகோதரர் எஸ்.பி.யாக இருப்பதாக சொல்கிறார்களே?
 

பதில் : ஆமாம். அவரிடமும் சொன்னோம். அவரும் இரண்டு பேரிடமும் பேசிப் பார்த்தார். கண்டித்துப் பார்த்தார். ஆனால் அவர்கள் இருவரும் கேட்கவில்லை. அதற்குப் பிறகு உன்னையும், உன் குழந்தையையும் காப்பாற்றிக்கொள் என கூறிவிட்டார். 
 

கேள்வி : அவர் எங்கு எஸ்.பி.யாக இருக்கிறார்?
 

பதில் : அவர் சி.எம். செல்லில்தான் இருக்கிறார்.


 

vaniyambadi



கேள்வி : என்ன சொல்லி மிரட்டுகிறார்?
 

பதில் : கல்யாணம் பண்ணும்போது 130 சவரன் நகை போட்டாங்க. அந்த நகைகளை எல்லாம் வைத்துவிட்டார்கள். அதனுடைய காசெல்லாம் அந்த அம்மாவிடம் தான் இருக்கிறது. எங்க வீட்டுல காசு கொடுத்தாங்கன்னா, அதை அப்படியே கொண்டுபோய் அந்த அம்மாகிட்ட கொடுத்துவிடுவார். என்னை யாரும் எதுவும் பண்ண முடியாது என்று மிரட்டுவார். அவர்கள் பேசிய ஆடியோ வைத்திருக்கிறேன். அப்படி ஆபாசமாக பேசுவார்கள். இதைவிட்டு வெளியே போனால் எனக்கும், எனது குழந்தைக்கும் பாதுகாப்பு இருக்குமா என்று தெரியவில்லை. அந்த ஆடியோவை கேட்டீர்கள் என்றால் தெரியும். என்னிடம் அவ்வளவு ஆதாரம் இருக்கிறது. ஆனால் அவர் பொறுப்பில் இருப்பதால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். 


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சந்தேகத்தின் பேரில் ஓட ஓட விரட்டி ஒருவர் வெட்டிக் கொலை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Suspect chased away a person  incident

அரியலூர் மாவட்டம் குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(45). இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். விவசாயியான மனோகரன் விவசாய பணிகளுக்காக டிராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின் போன்றவற்றை விலைக்கு வாங்கி வைத்துள்ளார். தனது சொந்த வேலைகள் போக அப்பகுதியில் உள்ள கிராம விவசாயிகளுக்கும் தனது ட்ராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின்களை வாடகைக்கு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தனது விவசாய ட்ராக்டரை ஓட்டுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை பணிக்கு அமர்த்தியுள்ளார். ரமேஷ்க்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாததால் தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார் மனோகரன். ரமேஷும் வீட்டில் இருந்தபடியே மனோகரனுக்கு உதவியாக அவரது விவசாய வாகனங்களை ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில், தனது வீட்டில் தங்கியிருக்கும் ரமேஷுக்கும், தனது மனைவி புஷ்பவள்ளிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார். நாளடைவில் மனோகரனுக்கு இருக்கும் சந்தேகம் அதிகமான நிலையில் நேற்று விவசாய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது கையில் அரிவாளுடன் காத்திருந்த மனோகரன் ரமேஷை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அரிவாளுடன் வெங்கனூர் காவல் நிலையத்தில் மனோகரன் சரணடைந்துள்ளார். இதனிடையே ரமேஷின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; அதிமுக நகர செயலாளர் கொலை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 AIADMK official who cheated by promising to get a job was passed away
வெங்கடேசன்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அதிமுக நகர  செயலாளராக  வெங்கடேசன் என்பவர் கட்சி பதவி வகித்து வருகிறார். இவரிடம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் எஸ்.பி.ஐ வங்கி எதிரில் டீக்கடை நடத்திவரும் ராஜேந்திரன் என்பவர் தனது மனைவி கல்பனாவுக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை கேட்டு கடந்த அதிமுக ஆட்சியில் 3 லட்சம் பணம் தந்துள்ளார். வேலை வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது.

ராஜேந்திரன், கல்பனா இருவரும் பலமுறை அவர் வீட்டுக்குச் சென்று பணம் கேட்டுள்ளனர். ஆனால் பணம் தராமல் இழுத்தடித்துள்ளார். இதற்கிடையே கல்பனா வெங்கடேசன் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இது ராஜேந்திரன் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெங்கடேசன் - ராஜேந்திரன் இடையே முன்விரோதம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் மார்ச் 16 ஆம் தேதி இரவு வெங்கடேசன் வங்கியில் ஏ.டி.ம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் வெங்கடேசனிடம் பிரச்சனை செய்துள்ளனர். அப்போது ராஜேந்திரன் கல்லை எடுத்து வெங்கடேசன் தலையில் பலமாக தாக்கியதில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட வெங்கடேசன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் கல்லால் தலையில்  தாக்கியதில் பலத்த ரத்த காயம் அடைந்த வெங்கடேசனை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் மார்ச் 17 ஆம் தேதி உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின் பெயரில் செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ராஜேந்திரனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து  வழக்கு பதிவு செய்த செஞ்சி போலீசார் ராஜேந்திரன்  மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் மீது கொலை  வழக்கு பதிவு செய்துள்ளனர்.  ராஜேந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி கல்பனாவை செஞ்சி போலீசார் தனிப்படை அமைத்து  தேடி வருகின்றனர்.அதிமுக செஞ்சி நகர கழக செயலாளர் கொலையால் செஞ்சி பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. அதிமுக நிர்வாகிகளிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.