தங்களுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக வி.ஐ.பி.க்கள் சிலர் வி.ஐ.பி.க்கள் மீது புகார் கொடுக்க சமூக வலைத்தளங்களில் ' Mee Too ' ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், ஆண்களுக்கு எதிராகவே ' Mee Too 'வைப் பயன்படுத்தி வந்தவர்கள், இப்பொழுது முதன்முறையாக பெண் நடிகை மீதே, இன்னொரு பெண் நடிகை ' Mee Too 'வில் புகார் கூறியது தான் திரையுலகை கலங்கடித்து வருகின்றது. தியேட்டர் கலைஞரான அனன்யாவை, பாலியல் துன்புறுத்தி தன்னுடைய நெருக்கத்திலே வைத்துக் கொண்டார் வேலைக்காரன், மகளிர்மட்டும் படங்களில் நடித்த மாயா கிருஷ்ணன் என்பது தான் புகாரே.!!!
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தியேட்டர் கலைஞரான அனன்யா தன்னுடைய முக நூல் பக்கத்தில், " கடந்த 2016ம் ஆண்டு எனக்கு 18 வயதாக இருக்கும் பொழுது மாயா கிருஷ்ணன் எனக்கு அறிமுகமானார். அப்பொழுது அவருக்கு வயது 25..! கலைத்துறையில் என்னை விட சீனியர் என்பதால் அவர் எனக்கு கலைத்துறை சார்ந்த பல தகவல்களைக் கூறியதால் மிகவும் நம்பிக்கைக்குரியவராக, நெருக்கத்திற்குரியவராக அவர் மாறினார். நானும் அவர் மீது மிகுந்த மரியாதையுடன் பழகி வந்தேன்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஒருக்கட்டத்தில் என்னுடைய நட்புக்களையும், எனது குடும்ப நண்பர்களையும் என்னிடமிருந்து திட்டமிட்டுப் பிரிக்க ஆரம்பித்தார். ஒருக்கட்டத்தில் அவரது வீட்டிலேயே தினசரி தங்கும் சூழல் உருவானது. ஒரே படுக்கையில் தூங்கும்போது எனக்கு முத்தம் கொடுப்பது, தவறாக நடப்பது எல்லாம் சாதாரண ஒன்று தான் என என்னிடம் கூறி என் மனதை பலவீனப்படுத்தி என்னுடன் அவர் தவறாக நடந்து வந்தார். ஒவ்வொரு நாள் இரவிலும் இது மாதிரி பாலியல் தொல்லைகள் எனக்கு நடைபெறும்." என பதிவிட "அவர் அப்படித்தான்." என கலையுலகத்தில் பரப்பரப்புத் தொற்றிக்கொண்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதே வேளையில், இதற்குப் பதிலளித்தாற் போல், " இது அனைத்தும் தவறானது. எனக்குப் பேரதிர்ச்சியாய் உள்ளது." என தனது முக நூலில் பதிவிட்டுள்ளார் மாயா கிருஷ்ணன். எனினும், பெண் மீது பெண் கூறிய' Mee Too ' தான் தற்பொழுது டிரென்டிங்கே.!!!!