Skip to main content

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 10 ஆண்டு சிறை - சென்னை சிறப்பு கோர்ட்

Published on 28/12/2018 | Edited on 28/12/2018
ex mla



சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் (2006 முதல் 2011 வரை எம்எல்ஏ) மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கர் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
ADMK former MLAs joined BJP

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அரசியல் கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒருவர் என 19 பேர் டெல்லியில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தலைமையில் பாஜகவில் இன்று (07.02.2024) இணைந்தனர்.

அதன்படி முன்னாள் எம்.எல்.ஏ.க்களான கந்தசாமி, சின்னசாமி, துரைசாமி, சேலஞ்சர் துரை, ரத்தினம், கோமதி சீனிவாசன், எஸ்.எம். வாசன், சந்திரசேகர், ஜெயராமன், முத்து கிருஷ்ணன், அருள், தங்கராசு, குருநாதன், ராஜேந்திரன் மற்றும் பாலசுப்ரமணியன் உட்பட 19 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்நிகழ்வில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம் காலமானார்

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Former DMK MLA ku.ka.Selvam passed away

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளருமான கு.க.செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (03-01-24) காலமானார். 

கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்பு, கடந்த 2021 ஆம் ஆண்டில் திமுக மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.க.வில் இணைந்த கு.க.செல்வம், 2022ஆம் ஆண்டு மீண்டும் திமுக வில் இணைந்தார். அதன் பின்பு, அவர் திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வந்த கு.க.செல்வம் இன்று (03-01-24) இன்று சிகிச்சை பலனின்று உயிரிழந்தார்.