Skip to main content

சென்னையில் தனியார் பெண்கள் விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் பாலியல் அத்துமீறல்... 80 ஆயிரம் ரூபாயுடன் ஓட்டம்பிடித்த வாலிபர் கைது!

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

சென்னை பசுமைவழிச் சாலையில் பெண்கள் விடுதியில் நுழைந்த மர்ம நபர் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியதோடு காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்கள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cctv


சென்னை பசுமைவழி சாலையில் செவிலியர்களுக்கான தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் சுமார் 50 பெண் செவிலியர்கள் தங்கியிருக்கின்றனர். மூன்று தளங்களாக உள்ள இந்த பெண்கள் விடுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு நுழைந்த மர்ம நபர் ஒருவர் மூன்றாவது மாடிக்கு சென்றுள்ளார். கேட்டை திறந்து உள்ளே படிக்கட்டுகள் வழியாக மேலே செல்வது வரை அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது.
 

cctv

மூன்றாவது தளத்தில் காற்றோட்டத்திற்காக கதவைத் திறந்து வைத்து நான்கு இளம் பெண்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்படி உறங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் பாலியல் சீண்டலில் அந்த மர்ம நபர் ஈடுபட்டுள்ளது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. தூக்கத்தில் இருந்த பெண்கள் பக்கத்தில் இருக்கும் சக தோழிகள் கைதான் மேலேப்படுகிறது என நினைத்த தருணத்தில் அந்த நபர் தொடர்ந்து அந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறான். அதேபோல் அந்த அறையில் பெண் ஒருவர் வைத்திருந்த கைப்பையில் இருந்த 80 ஆயிரம் ரூபாயை கைபையோடு தூக்கி சென்றுள்ளான். இந்நிலையில் தூக்கத்தில் இருந்து எழுந்த பெண்கள் மர்ம நபர் ஓடுவதை பார்த்து அதிர்ந்து அச்சத்தில் கத்தியுள்ளனர்.
 

cctv cctv

அனைவரும் ஓடி வருவதற்குள் அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டான். இதனையடுத்து விடுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அந்த மர்ம நபர் யார் என்று பார்த்தபோது அது அதேபகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான சரத்குமார் என்பது தெரியவந்தது. அவனது தாய் அதே விடுதியில் பணிபுரிந்ததால் அவரை அழைத்து வந்து உங்கள் மகன் செய்திருக்கும் வேலையை பார்த்தீர்களா என அந்த பெண்கள் முறையிட்டனர். இதையடுத்து இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அபிராமபுரம் போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு சரத்குமாரை தேட ஆரம்பித்தனர்.

cctv


தப்பிச் சென்ற கல்லூரி மாணவன் எதிரில் ரோந்து போலீசார் வாகனத்தை பார்த்ததும் பசுமை வழிச்சாலையின் நடைபாதையில் படுத்து உறங்குவது போல் நடித்துள்ளான். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே அந்த நபரை பிடித்து விசாரித்ததில் உண்மை தெரிய வந்தது. அவனிடம் இருந்து 80 ஆயிரம் ரூபாயையும், கைப்பையையும் போலீசார் கைப்பற்றி சரத்குமாரை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

cctv

சென்னை பசுமைவழிச் சாலை ஏரியா என்பது முக்கிய தலைவர்கள், நீதிபதிகள் குடியிருக்கும் பகுதி ஆகும், இதனால் அந்த பகுதியில் எப்போதும் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு என்பது இருந்து கொண்டே இருக்கும். இந்த சூழலில் அந்த பகுதியில் தனியார் பெண்கள் விடுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அங்கு எப்படியாப்பட்ட பாதுகாப்பு சூழல் நிலவுகிறது என்பதற்கு ஒரு சான்று ஆகவே இருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.