பிரகாஷ் மீது சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் 501- வது சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பந்தபட்ட டாஸ்மாக் கடையால் இதுபோன்ற சமூக விரோதிகள் குடித்துவிட்டு இந்த வழியாக வரும் பள்ளி மாணவ மாணவிகளிடமும், பொதுமக்களிடம் தீய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இந்த டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என்று அந்த பகுதியிலுள்ள பொதுமக்கள், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தேன்மொழி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாசர், விதொச மாவட்ட செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கட்சியின் காட்டுமன்னார்கோவில் வட்டசெயலாளர் இளங்கோ, முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் பெக்மான்,டிபிஐ ஒன்றிய துணைச்செயலாளர் இன்பதமிழன் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் டாஸ்மாக் கடையின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தேன்மொழி மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. சம்பந்தபட்டவர் மீது கடுமையான தண்டனை அளிக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும். ஆண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் பெண்களிடமும், பெண்குழந்தைகளிடமும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கூறி வளர்க்க வேண்டும் என்றார்.