Skip to main content

மாணவிக்கு பாலியல் கொடுமை;கடுமையான தண்டனை வழங்க மாதர் சங்கம் வலிறுத்தல்

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

 

கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டம் குமாரகுடி கிராமத்தை சேர்ந்த 13வயது மாணவியை அதே பகுதியை சார்ந்த நான்கு கயவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிதம்பரம் ராஜமுத்தையா மருந்துவ கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவருகிறார்.  இதனையறிந்த அனைத்திய ஐனநாயக மாதா் சங்கத்தின் மாவட்ட செயலாளர்  தேன்மொழி,  மாவட்ட துணை செயலாளர் மல்லிகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ராமசந்திரன் மாவட்டகுழு உறுப்பினர்  கற்பனைசெல்வம், குமராட்சி ஒன்றிய செயலாளர் மூர்த்தி உள்ளிட்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று மாணவியின் உடல் நலவிபரத்தை  அறிந்து மாணவிக்கும் குடுபத்தினருக்கும் ஆறுதல் கூறினார்கள்.

 

 Sexual harassment of the student, Mather associations to give severe punishment

 

மேலும் சம்பந்தபட்ட கயவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற ஊரின் வாயிலில் அரசின் டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு மதுஅறிந்துவிட்டு குடிமகன்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அந்த டாஸ்மார்க் கடையை அகற்றகோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் கிராமபொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்