Skip to main content

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: கோவை திமுக பிரமுகர் கைது!

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

ஓடும் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கோவையைச் சேர்ந்த திமுக பிரமுகரை சேலம் ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.

 

 

கோவையைச் சேர்ந்த கணவனும் அவருடைய கர்ப்பிணி மனைவியும் சென்னையில் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 5ம் தேதி சென்று இருந்தனர். பின்னர் அவர்கள் கடந்த 10ம் தேதி, சென்னையில் இருந்து நீலகிரி விரைவு ரயில் மூலமாக கோவை சென்றனர். அவர்கள் சென்ற அதே ரயில் பெட்டியில், கோவை மாவட்டம் இருகூரைச் சேர்ந்த திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரான சந்திரன் (65) என்பவரும் பயணம் செய்தார். 

 

 Sexual harassment in pregnant woman in train: Coimbatore DMK member arrested

 

கர்ப்பிணி படுத்திருந்த இருக்கைக்கு மேல் இருக்கையில் சந்திரன் படுத்து இருந்தார். நள்ளிரவு நேரத்தில், சந்திரன் தூக்கத்தில் இருந்த அந்த கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. அந்த ரயில் சேலம் ரயில் நிலையம் வந்து சேர்ந்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த சந்திரன் மீது சேலம் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தார். 

 

 

அப்போது பணியில் இருந்த தலைமைக் காவலர் கிருஷ்ணமூர்த்தி, இரண்டு தரப்பினரையும் நேரில் அழைத்து விசாரித்தார். ஒரு கட்டத்தில் அவர்கள் சமாதானமாக செல்வதாக கூறியதால், அதை எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டார். ஆனால், கோவை சென்ற பிறகு அந்த கர்ப்பிணியின் கணவர், கோவை ரயில்நிலைய காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து கோவை ரயில்வே காவல்துறையினர், சேலம் ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து, கர்ப்பிணியின் கணவரை சேலத்திற்கு வரவழைத்த காவல்துறையினர் மீண்டும் எழுத்து மூலம் புகார் பெற்று, பாலியல் தொல்லை கொடுத்த சந்திரன் மீது எப்ஐஆர் பதிவு செய்தனர்.

 

 

இதையடுத்து ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசி, மற்றும் காவலர்கள் இருகூர் சென்று சந்திரனை கைது செய்தனர். விசாரணையில் சந்திரனுடன் வந்த மற்றொரு நபரும் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து அவர் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், கைதான சந்திரனை சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

 

 

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சந்திரனை வரும் ஏப்ரல் 11ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 

இதற்கிடையே, கர்ப்பிணி அளித்த புகாரை சரிவர விசாரிக்காமல் சமாதானமாகப் போய்விடும்படி கூறிய ரயில்வே தலைமைக் காவலர் கிருஷ்ணமூர்த்தியை அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து, ரயில்வே எஸ்பி ரோகித் நாதன்ராஜகோபால் உத்தரவிட்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.