Skip to main content

பாலியல் தொந்தரவு பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நடக்கிறது-கவுதமி கருத்து

Published on 22/12/2018 | Edited on 22/12/2018
Sexual harassment is not only for women but also for males

 

பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும்தான் என நடிகை கவுதமி கூறியுள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில்  கலந்துகொண்ட நடிகை கவுதமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

 

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில்தான் பாலியல் தொந்தரவுகள் நடக்கின்றது. குடும்பத்தை சேர்ந்தவர்களால் கூட தொந்தரவுகள் நடக்கின்றது போன்ற கேள்விகள் குத்திக்காட்டுவதாகவும்,மனதை புண்படுத்தும் விதமாகவும் இருக்கிறது. 

 

இந்த மாதிரி பாலியல் வன்கொடுமைகள் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பல விதங்களில், பல சூழ்நிலைகளில், பல நபர்களால் நடக்கின்றது. எப்போதும் அனைத்து தரப்பினரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கெளதமியின் நில மோசடி வழக்கு; அழகப்பன் மீது குண்டாஸ்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 Kundas on Alagappan for Gauthami's land fraud case

நடிகை கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தனது ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அபகரித்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், “நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் செலவுக்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அழகப்பன் என்பவர் உதவி செய்வதாக கூறினார். அதனால் எனது சொத்துகளை விற்கும் உரிமையை அவருக்கு கொடுத்தேன். அதற்காக என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். ஆனால் அதன் மூலம் போலி பத்திரங்களைத் தயார் செய்து, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது சொத்துகளை அபகரித்துவிட்டனர். இது குறித்துக் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே, நடிகை கெளதமி பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தார். 

இதையடுத்து கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில், பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, சதீஷ்குமார் ஆகிய 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல நாட்கள் தலைமறைவாக இருந்து வந்ததால், மூன்றுக்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். மேலும் அவர்களின் இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணத்தை மீட்டனர். பின்பு லுக்கவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமீன் கோரிய நிலையில், அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார், கேரளா திருச்சூருக்கு சென்று அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, கார் ஓட்டுநர் சதீஸ்குமார் ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தனர். இதனையடுத்து, அழகப்பனை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. 

இந்த நிலையில், கெளதமியிடம் மோசடி செய்த அழகப்பனை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், சென்னையில் மட்டும் கடந்த 7 நாட்களில் அழகப்பன் மற்றும் வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என மொத்தம் 19 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

Next Story

‘அ.தி.மு.கவில் இணைந்தது ஏன்?’ - நடிகை கெளதமி விளக்கம்

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
 Actress Gauthami explains Why did join ADMK?

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக அறியப்பட்ட கௌதமி பா.ஜ.கவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இதனிடையே, சமீபத்தில் நடிகை கௌதமி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் 25 கோடி மதிப்பிலான தனது சொத்துகளை பா.ஜ.க பிரமுகர் அழகப்பன் என்பவர் மோசடி செய்துவிட்டார் என்று புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில், பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, சதீஷ்குமார் ஆகிய 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, நடிகை கௌதமி பாஜகவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர், ‘25 ஆண்டுகாலமாக கட்சியில் இருந்து வருகிறேன்; ஆனால் எனக்கு கட்சி துணை நிற்கவில்லை. அழகப்பனுக்கு பா.ஜ.கவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் உதவி செய்கின்றனர். அதனால் மிகுந்த மனவேதனையுடன் கட்சியில் இருந்து விலகுகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகை கெளதமி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கீர்ன்வேஸ் சாலையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து, அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து நடிகை கெளதமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எடப்பாடி பழனிசாமியின் பணிகள் என்னைக் கவர்ந்ததால் நான் அ.தி.மு.கவில் இணைந்தேன். அ.தி.மு.கவில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பா.ஜ.கவில் இருந்து ஏன் விலகினேன் என்பதை உரிய நேரத்தில் நான் விரிவாக கூறுகிறேன்” என்று கூறினார்.