Skip to main content

பாலியல் தொந்தரவு... அடி, உதை, இளம்பெண்ணை சித்ரவதை செய்த ஓ.பி.எஸ்.டீம்.!!!

Published on 18/04/2018 | Edited on 18/04/2018

 

 

     பெரிய இடத்து பிரச்சனை.! நமக்கேன் வம்பு..? என ஆரம்பத்தில் தயங்கினாலும், வேறு வழியில்லாமல் புகாரினை பதிவு செய்து மனுரசீது கொடுத்துள்ளது நெல்லை பெருமாள்புர காவல்நிலையம். என்ன நடந்தது.?

 

  " பெங்களூருவிலுள்ள மென்பொருள் கம்பெனியில் வேலைபார்க்கும் எனக்கு இங்கு சொத்துக்கள் உண்டு. அந்த சொத்தின் வழக்கிற்காக அடிக்கடி நெல்லைக்கு வந்து போவது உண்டு. மாதத்திற்கு இரு தடவையாகவாது இங்கு வரவேண்டும் என்பதாலும், பாதுகாப்பிற்காகவும் ஆரம்பத்தில் இங்குள்ள மயன் அபார்ட்மெண்டில் தங்கியிருந்தேன்.  நான் என் கணவருடன் விவகாரத்துப் பெற்று தனியாக வாழ்கின்றேன் என்பதனையும், என்னுடைய சொத்துக்களை வளைத்துப் போடவும் என்னுடைய மொபைல் எண்ணை அபார்ட்மெண்டில் எடுத்து பேச ஆரம்பித்தார் அங்கு குடியிருந்து வந்த ராஜ்குமார் என்பவர். நாளடைவில் அது செக்ஸ் டார்ச்சராக மாறியது. தேவையில்லாத குறுஞ்செய்திகளும், ஆபாசமான வாட்ஸப் மெஜேஜ்களும் வர அங்கிருப்பது நல்லதல்ல என புறப்பட்டு ராமலிங்கம் நகரிலுள்ள லைப்ஸ்டைல் அபார்ட்மெண்டிற்கு குடி புகுந்தேன். இங்கே என்னவென்றால் அவருடைய உடன்பிறந்த அண்ணனான கிருஷ்ணமூர்த்தி இங்கே இருப்பது பிறகு தான் தெரியவந்தது. அங்கு என்ன நடந்ததோ அது போல் தான் இங்கும் நடந்தது. ஜாடையாகவும், நேரடியாகவுமே பாலியல் தொந்தரவு செய்கின்றனர் இருவரும். இப்பொழுது பள்ளி விடுமுறை என்பதால் பெங்களூருவிலிருந்து குழந்தைகளை கூப்பிட்டு இங்கு இருக்கின்றேன். இரண்டு நாளைக்கு முன் வீட்டிற்குள் நுழைந்த கிருஷ்ணமூர்த்தி என் தலைமுடியை இழுத்து பிடித்து அடிக்க செயின் அறுந்து விட்டது. இதனை தடுக்க முற்பட்ட எனது மகனையும் அடித்துக் காயப்படுத்திவிட்டனர்." என்கிறது வித்யா சேதுராமன் என்பவரால் பெருமாள்புரம் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மனு.

 

  புகார் கொடுத்திருக்கும் வித்யாவோ., " மனுவில் என்ன கூறினேனோ அது அத்தனையும் நிஜம். இரண்டு வருடமாகப் பொறுத்துப் பார்த்தேன். நேரடியாகவே எதிர்த்துப்பார்த்தேன். யார் தெரியுமா..? தலையை கொய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். தனியாக பெண் இருந்தால் குற்றமா..? " என்றார் அவர்.

 

   புகாரினை வாங்கி மனுரசீது மட்டும் கொடுத்துவிட்டு அனுப்பிய காவல்துறை விசாரணைக்காக இன்று வரை சம்பந்தப்பட்டவர்களை அழைக்கவில்லை என்பது மறுக்க முடியாது. சம்பந்தப்பட்டவர்களோ, துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸீன் பினாமியான ஆர்.எஸ்.முருகனின் அண்ணன் மகன்கள் என்பதாலேயே காவல்துறை தயக்கம் காட்டுகின்றது என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

பழங்குடியினப் பெண்ணுக்கு விஏஒ பாலியல் தொந்தரவு; கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

VAO suspended for Misbehaviour of Tribal Woman in viluppuram

 

விழுப்புரம் மாவட்டம், நல்லாபாளையம் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர் இளம்பெண் கிருத்திகா (28, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய கணவர் கடந்த 2014 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், கிருத்திகாவும் அவருடைய 11 வயது மகனும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நல்லாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ் தன்னை பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாக, அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குச் சென்று புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். 

 

அவர் அளித்த அந்தப் புகார் மனுவில், ‘எனது கணவர் இறந்த நிலையில், கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவித் தொகை வழங்கக் கோரி நல்லாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸிடம் விண்ணப்பம் ஒன்றை அளித்தேன். அப்போது அவர், கணவரின் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் ரூ.5,000 லஞ்சம் கேட்டு எனது செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டார். அதன்பின், சில நாட்கள் கழித்து, அவரிடம் ரூ.3,000 கொடுத்து இறப்பு சான்றிதழை பெற்றேன். அதன்பின், அவர் என்னை செல்போனில் தொடர்புகொண்டு விதவை உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறியதால் நான் இ-சேவை மையத்தில் பதிவு செய்தேன். 

 

இதனையடுத்து, என்னை இரவு நேரத்தில் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு தகாத முறையிலும், பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்தார். அவர் என்னிடம் பேசிய செல்போன் பதிவு ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இது குறித்து கண்டாச்சிபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸை வருவாய் கோட்டாட்சியர் காஜாசாகும் அமீது பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு; மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

vinayakan apologized talking controversially sexual relationship 10 women

 

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விநாயகன், சமீபத்தில் தான் நடித்த ’ஒருத்தி’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய விநாயகன், "சமீப காலமாக மலையாள சினிமாவில் மீ டூ குறித்து அதிகம் பேசப்படுகிறது, அது என்னவென்று எனக்கு புரியவில்லை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி அவருடன் உறவு வைத்துக் கொள்வதுதான் மீ டூ வா ? என்று தெரியவில்லை. எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருந்தால், அந்த பெண்ணிடம் என்னுடன் உறவு வைத்துக்கொள்ள விருப்பமா என கேட்பேன், அதற்கு  சம்பந்தப்பட்ட பெண் விருப்பம் தெரிவித்தால் உறவு வைத்துக்கொள்வேன். அதுதான் மீ டூ என்றால் அதை நான் திரும்பவும் செய்வேன். இப்படி என் வாழ்நாளில் நான் 10 பெண்களிடம் உறவு வைத்துள்ளேன்" எனக் கூறினார்.

 

இவரின் இந்த கருத்து மலையாள திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.  மேலும் நடிகர் விநாயகன் கருத்திற்கு எதிராக கேரளாவில் பெண்கள் அமைப்புகளும், நடிகை பார்வதி, இயக்குநர் விது  வின்சென்ட் உள்ளிட்ட திரைப்பட பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

 

இந்நிலையில் நடிகர் விநாயகன் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நான் பெண்களுக்கு எதிராக அதன் தீவிரத்தை அறியாமல் சில கருத்துக்களை தெரிவித்துவிட்டேன். இது யாரையாவது பாதித்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.