Skip to main content

பாலியல் புகார்: ஓய்வு பெறும் நாளில் வருவாய்நீதிமன்ற தனித் துணை ஆட்சியர் சஸ்பெண்ட்

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

பெண் பணியாளர் பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் தொடர்பாக நெல்லை துணை ஆட்சியர் ஓய்வு பெறும் நாளில் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

sdsd

 

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் நீதிமன்ற தணித் துணை ஆட்சியராக ராமசுப்பிரமணியன் பணியாற்றி வந்தார். கோவில்பட்டி பகுதியை சேர்ந்த இவர்  கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட கலால் துறை உதவி கமிஷனராக பணியாற்றினார். அப்போது இவர் மீது உதவியாளர் நிலையில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். இப்புகார் மீதான அவசரம், அவசரமாக விசாரணை நடத்தப்பட்டதில் உரிய ஆதாரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

 

 

இதனையடுத்து சம்பந்தப்பட்ட பெண் இப்பிரச்னை தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதில், அரசு துறைகளில் பணியாற்றும் பெண் பணியாளர் அளிக்கும் பாலியல் ரீதியான புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதனையடுத்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும், கலால் துறை கமிஷனருமான (பொறுப்பு)  கிர்லோஸ்குமார் பரிந்துரையின் பேரில் இப்புகார் தொடர்பாக விசாரிக்க மாவட்ட கலெக்டர் ஷில்பாவுக்கு  உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து நெல்லை மாவட்ட விசாகா கமிட்டி தலைவரும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலருமான ஜெயசூர்யா தலைமையிலான கமிட்டியினர் இப்புகார் குறித்து விசாரணை நடத்தினார்.  இதனால் இச்சம்பவத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

விசாகா கமிட்டி விசாரணைக்கு பல்வேறு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இதனால் இக்கமிட்டி விசாரணையை அவசரம், அவசரமாக நடத்தாமல்  முறையாகவும், உரிய முறையிலும் நடத்த வேண்டும் என பெண் பணியாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

 

 

இந்நிலையில் தனித்துணை ஆட்சியர் மீதான விசாரணை நடந்து வந்த நிலையில் இன்று திடீரென ராமசுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவிட்டது. பாலியல் புகாருக்கு உள்ளான தனித் துணை ஆட்சியர் இன்று  ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி பங்கஜம் கோவில்பட்டி கோட்ட கலால் அலுவலகத்தில் டைப்பிஸ்டாக பணிபுரிந்து வருகிறார்.

 

 

 

ஓய்வு பெறும் நாளில் நெல்லை தனித் துணை ஆட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் வருவாய் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மணிப்பூரில் மீண்டும் வன்முறை; 2 பேர் உயிரிழப்பு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
manipur Churachandpur District sp office incident

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.

இந்நிலையில் மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் சியாம் லால் என்பவர் கடந்த 14 ஆம் தேதி ஆயுதம் தாங்கிய குழுவினருடன் இருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சியாம் லால் பணியிடை நீக்கம் செய்ததை எதிர்த்து குக்கி சமூகத்தினர் சுராசந்த்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி காவல் நிலையத்தை சூறையாடினர்.

அப்போது கூட்டத்தை கலைக்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சட்டசபையில் தொடர் அமளி; 6 பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
6 BJP MLAs suspended Continuity in Assembly at west bengal

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கும்பல், தங்களது நிலத்தை பலவந்தமாக கைப்பற்றியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அந்த பகுதியில் வாழும் பெண்கள் குற்றம் சாட்டினர். 

மேலும், ஷேக் ஷாஜகான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏராளமான பெண்கள் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் ஊழல் செய்ததாக ஷேக் ஷாஜகான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தச் சென்றனர். அப்போது, அமலாக்கத்துறை அதிகாரிகளை ஒர் மர்ம கும்பல் தாக்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த தொடர் சம்பவங்களை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல் ஷேக் ஷாஜகான் தலைமறைவாகி உள்ளார் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், மேற்கு வங்க மாநில சட்டசபை இன்று (12-02-24) கூடியது. இதையடுத்து, சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, ஷாஜகானை கைது செய்ய் வேண்டும் என்று பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், அவர்கள் தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சோபந்தேப் சட்டர்ஜி, அமளியில் ஈடுபட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வர முன்மொழிந்தார். இதற்கு அனுமதி அளித்த சபாநாயகர் பிமன் பானர்ஜி, அமளியில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 6 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.