Advertisment

மைனர் மைத்துனியைக் கடத்தி பாலியல் அத்துமீறல்! -போக்சோவில் புது மாப்பிள்ளை கைது!

“இதெல்லாம் கொடுமைங்க..” என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் எருக்குவாய் கிராமத்தினர்.

Advertisment

விவகாரம் இதுதான் –

New groom arrested

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகில் இருக்கிறது எருக்குவாய் கிராமம். இந்த கிராமத்துப் பெண்ணை, பெரியபாளையம் – தேர்வழி கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி திருமணம் செய்துகொள்கிறார். புது மணப்பெண்ணுக்கு 13 வயதில் தங்கை ஒருவர் இருக்கிறார். மாமனார் வீட்டிலிருந்தபோது, அந்த மைனர் பெண்ணுக்கு வலை விரித்திருக்கிறார் அஜித்குமார். இந்தச் சூழ்நிலையில், அந்த மைனைர் பெண் காணாமல் போய்விடுகிறார். அப்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் கடந்த 27-ஆம் தேதி புகார் அளித்தனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், அஜித்குமாரை விசாரித்திருக்கின்றனர். அப்போதுதான், ஆரணி அஞ்சாத்தம்மன் அருகிலுள்ள தன்னுடைய செல்போன் கடையில், அஜித்குமார் அடைத்து வைத்திருந்தது .தெரிய வந்திருக்கிறது. மைனர் பெண்ணான மைத்துனியை அந்தக் கடையில் வைத்து அஜித்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததையும் விசாரணையில் கண்டுபிடித்திருக்கின்றனர்.

மனைவியுடன் நல்லவிதமாகப் புதுவாழ்க்கையைத் தொடங்க வேண்டிய அஜித்குமார், தன்னுடைய வக்கிர புத்தியால், மைத்துனி மீது மோகம் கொண்டு, தன் மனைவிக்கும், மாமனார் குடும்பத்திற்கும் பெரும் கொடுமையை இழைத்திருக்கிறார்.

மைத்துனி காவல்துறையால் மீட்கப்பட்ட நிலையில், அஜித்குமார் மீது போக்சோ சட்டம் பாய்ந்து, பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இப்போது புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் புதுமாப்பிள்ளை அஜித்குமார்,

Sexual Abuse
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe