Skip to main content

மனைவிக்கு போனில் பாலியல் குறுஞ்செய்தி... மர்ம நபரை கட்டிவைத்து வெளுத்த ஊர்மக்கள்!!

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலை அடுத்த தளவாய்புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தனது மனைவிக்கு துணிக்கடையுடன் கூடிய டெய்லரிங் கடை ஒன்றை ஒரு மாதத்திற்கு முன்பு வைத்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக சுப்பிரமணியனின் மனைவிக்கு செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக குறுஞ்செய்திகள் மற்றும் ஆபாசமாக  பேசுவது போன்று தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்துள்ளான். ஒரு கட்டத்தில் இதுகுறித்து சுப்பிரமணியனிடம் மனைவி சொல்ல சுப்பிரமணியன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

sexual abuse in cellphone massage... police investigation

 

ஆனால் காவல்துறையோ இதனை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டனர். இதுகுறித்த வழக்கை சைபர் குற்றப்பிரிவு போலீசார்தான் விசாரிக்க முடியும் என்று கிடப்பில் போட்டுவிட்டனர். ஆனால் குற்றம்சாட்டப்பட்ட அந்த மர்ம நபர் தொடர்ந்து சுப்பிரமணியன் மனைவிக்கு தொலைபேசியில் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால் ஒரு கட்டத்தில் தாங்க முடியாத அவரது மனைவி துணிக்கடை மற்றும் டெய்லரிங் ஷாப்பை மூடும் நிலைக்கு சென்று விட்டார்.

 

 

இதையடுத்து தனது மனைவியை அந்த நபரிடம் பேச வைத்து நைஸாக நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் சுப்பிரமணியன். ஜீன்ஸ் பேண்ட், மடித்துவிட்ட புல் ஹாண்ட் ஷர்ட், தலையில் கலர் பிளீச்சிங் என ஸ்டைலாக வந்து நின்ற அந்த மர்ம நபர் சுப்பிரமணியன் கையில் சிக்க அங்கு கூடியிருந்த பொதுமக்கள், சுப்ரமணியனின் நண்பர்கள் என அனைவரும் போட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர்.

 

 

sexual abuse in cellphone massage... police investigation

.

 

போலீசுக்கு தகவல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு போலீசார் வராததால் செல்போனில் தீராத தொல்லை தந்த அந்த காதல் ரோமியோவை சாலையில் வருவோர் போவோரிடம் விஷயத்தைச் சொல்லி அவனை மின்கம்பத்தில் கட்டிவைத்து சட்டையை கழட்ட வைத்து அரை நிர்வாணமாக அடித்தனர். அதன் பிறகு தாமதமாக வந்த போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டனர். பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர்  ஈசன்தங்கு பகுதியைச் சேர்ந்த ராம்பிரபு என்பதும், கடந்த 10 தினங்களுக்கு முன்பு துணிக்கடைக்கு வந்து அங்குள்ள பெண்களிடம் ஆபாசமாக பேசியதால் விரட்டப்பட்ட மர்ம நபர் என்பதும் தெரியவந்தது.

 

 

sexual abuse in cellphone massage... police investigation

 

சுப்பிரமணியன் மனைவியை கண்காணித்து  அவர் எப்போது கடைக்கு வருகிறார், வீட்டுக்கு எப்போது செல்கிறார் கடையில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் கண்காணித்த ராம்பிரபு கடையில் முகப்பு போர்டில் இருந்த செல்போன் நம்பரை எடுத்து சுப்பிரமணியனின் மனைவிக்கு இதுபோன்று ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த இடத்திலேயே விசாரணையில் ஈடுபட்ட போலீசார் பின்பு அவனை பத்திரமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.