Skip to main content

சென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்!!

Published on 16/12/2018 | Edited on 16/12/2018

 

சென்னையில்  அம்பத்தூர், கொரட்டூர் உள்ளிட்ட பல இடங்களில் நள்ளிரவில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து வீடு புகுந்து பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கொடூரன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் கொள்ளை போவதாது தொடர்பான புகார்கள் வந்ததை அடுத்து, காவல்துறையினர் பட்டறவாக்கம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும் வகையில் வந்த ஒருவரை மடக்கி விசாரித்த பொழுது அவன் வந்த வாகனத்துக்கு எந்த ஆவணங்களும் இல்லை, மேலும் அவனது பதில் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. இதனால் அவனை விசாரிக்க முற்பட்ட போலீசார் அவனது மொபைலை வாங்கி பரிசோதனை செய்தனர். அதில் ஏராளமான பெண்களுடன் பிடிபட்ட அவன்   பலாத்காரம் செய்த வீடியோக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ந்த போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினர். 

 

h

 

அந்த மொபைலில் உள்ள அனைத்து வீடியோவிலும் அவன் இருந்ததால் அந்த வீடியோக்கள் அனைத்தும் அவனே எடுத்துள்ளான். மேலும் பெண்களை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளான் என்று போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து அவனை சிறப்பு கவனிப்புடன் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணையில் அவன் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பது தெரியவந்தது. பெங்களூருவில்  மென்பொறியாளராக பணிபுரிந்து வந்த அவன் ஓசூரில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அங்கிருந்து சென்னைக்கு தப்பி வந்தான். 

 

கடந்த 2010ஆம் ஆண்டு வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை, சுமார்  50 பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தான். அதோடு மட்டுமல்லாமல் அவர்களை மிரட்டி பணம், நகை ஆகியவற்றையும் பறித்துள்ளான்.  ஆனால் பணம் நகை திருடப்பட்ட விவகாரத்தில் மட்டுமே அவன் கைது செய்யப்பட்டிருந்தான். அப்படி நகை, பணம் திருட்டு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்ட அவன் மீது திருட்டு வழக்குகள் இருந்ததே தவிர பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பெண்கள் யாரும் புகார் கொடுக்க முன்வராததால் தப்பித்து வந்தான்.  இந்நிலையில் பெண் ஒருவர் துணிச்சலாக புகார் கொடுத்தும் சைதாப்பேட்டை போலீசார் அந்த புகாரின் மீதான விசாரணையை திறம்பட நடத்தாததால் மூன்று மாதங்களுக்கு முன்பு அறிவழகன் ஜாமீனில் வெளியே வந்துள்ளான். 

 

h

 

ஜாமீனில் வெளியே வந்த பின் இருசக்கர வாகனம் ஒன்றை திருடிய அறிவழகன். இரவு நேரங்களில் தனது கைவரிசையை மீண்டும் காட்ட தொடங்கியுள்ளான். அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் எஸ்டேட் பகுதிகளில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு, வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து இந்த வேட்டையை நடத்தி உள்ளான்.  அதாவது அவன் நோட்டமிட்டு வைத்திருக்கும் வீட்டின் வாசல் கதவை தட்டி விட்டு மறைந்து கொள்வான். பின்னர் வீட்டின் உள்ளே இருக்கும் பெண் கதவைத் திறந்தவுடன் சடாரென்று உள்ளே புகுந்து கதவை தாளிட்டு அசுர வேகத்தில் அவர்கள் மீது பாய்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர் அந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாகவும் பதிவு செய்து கொள்வான். அதன்பிறகு நகை, பணம் ஆகியவற்றை பறித்து சென்று விடுவான். அதன்பின் ஏற்கனவே அவன் எடுத்த வீடியோவை காட்டி கணவன் வீட்டில் இருக்கும் போதே அந்த பெண்களிடம் கட்டாய பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளான் என்ற அதிர்ச்சி தகவலும் இந்த விசாரணையில் வெளிவந்துள்ளது.

 

h

 

குடும்ப மானம் போய்விடும் என கருதி பெரும்பாலான பெண்கள் இது பற்றி புகார் அளிக்காமல் இருந்து வந்துள்ளனர். இது அவன் தப்பிப்பதற்கு ஒரு பெரிய சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு இருந்தான் எனகூறுகின்றனர் காவல்துறையினர். கடந்த 3 மாதத்தில் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்ததுடன் நகைகளையும் எடுத்து சென்றுள்ளான்.  கடந்த மாதம் அடுத்த மூன்று தினங்களில் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் 2 பெண்கள் உட்பட 3 பேர் இவரிடம் சிக்கியுள்ளனர். அவர்கள் மட்டுமே தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து சம்பத்தப்பட்ட தெருக்களில் சிசிடிவி கேமரா பொருத்தினர். அந்த வகையில் ஆவடி, காமராஜ் நகரில் அறிவழகன் கைலி கட்டிக் கொண்டு ஒரு வீட்டிற்குள் ஏறி குதித்து உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. ஒரு வீட்டில் மட்டுமல்ல பல வீடுகளில் இது போல் தொடர் சம்பவங்களை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடும் சிசிடிவி காட்சி பதிவுகளும் கிடைத்துள்ளது.

 

h

 

பின்னணியில் அவனைக் காப்பாற்றுவதற்கு  இரண்டு வழக்கறிஞர்கள் இருப்பதாகவும், அவர்கள் அவனிடமிருந்து கொள்ளையடித்த பணத்தில் பங்கு பெற்றுக் கொள்வதாகவும், வாகன சோதனையில் சிக்கினால்  அவன் தங்களுக்கு தெரிந்தவன்தான் எனக்கூறி சிபாரிசு செய்து அவனை காப்பாற்றி விட்டது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே காவல்துறையிடமிருந்து தப்பித்து ஓடி வழுக்கி விழுந்த கொடூர கொள்ளையன் அறிவழகனின் வலது கை முறிந்து போனது. அந்த இரவில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்துறையிடம் விவரித்த பாதிக்கப்பட்ட மின்பொறியாளர் பெண் ஒருவர், இவனைப் போன்ற கொடூர குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராக முன்வரக் கூடாது என்றும், மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.