2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபருக்கு மதுரை மகளிர் நீதிமன்றம் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன் 12,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மதுரை நெடுங்குன்றம் காலனியில் இரண்டு சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முத்தையா என்பவனுக்கு மதுரை மகளிர் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.
சிறார்களுக்கு எதிரானபாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் சூழலில்அதிகபட்சமாக மரண தண்டனை வரை விதிக்க வழிவகை செய்யும் போக்ஸோ சட்ட திருத்த மசோதா அண்மையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.