Skip to main content

நெல்லையில் பரபரப்பு.... 30 முட்டைகளுடன் அடை காத்த ஏழு வயது மலைப்பாம்பு சிக்கியது!!

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

நெல்லை மாவட்டம் பாளை கக்கன் நகர் அருகே கிருபா நகர் பகுதியில் உள்ள இங்கு ஒரு மீன் பண்ணை அமைந்துள்ளது. இதன் பின்புறமுள்ள முல்லைச் செடிகள் நிறைந்த பகுதியில் மலைப்பாம்பு நடமாட்டம் இருந்துள்ளது.

 A seven-year-old python caught with 30 eggs in nellai


இது குறித்து அப்பகுதியினர் பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு நிலைய அலுவலர் வீர ராஜா, முருகன், பாலன் உலகமுத்து மற்றும் வீரர்கள் விரைந்து சென்று அந்தப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு புதருக்குள் பதுங்கியிருந்த 11 அடி நீளம் மலைப்பாம்பை பிடிக்க நீண்ட நேரம் போராடினார். இதையடுத்து பாம்பு பிடிக்கும் நிறுவுனர் ராமேஸ்வரம், வனத்துறை ஊழியர் பால்பாண்டி ஆகியோர் உதவியுடன் புதருக்குள் இருந்த மலைப் பாம்பையும் அதன் 30 முட்டைகளையும் மீட்டனர். பிடிபட்ட பாம்பு மற்றும் முட்டைகள் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் அவற்றை பொன்னாக்குடியில் சமூக வனக்காடு பராமரிப்பு அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.

 A seven-year-old python caught with 30 eggs in nellai


இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில் சமீப நாட்களாக இப்பகுதியில் ஆட்டுக்குட்டி, கோழி போன்றவைகள் காணாமல் போனது. மலைப்பாம்பு நடமாட்டம் இருந்ததால் நாங்களும் அதனைத் தேடி வந்தோம். இப்பகுதியிலுள்ள ஒரு புதருக்குள் பாம்பு ஊர்ந்து சென்றதை கவனித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தோம். பாம்பு இவ்வளவு முட்டைகளுடன் சிக்கியது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

இது குறித்து வனத்துறையின் கால்நடை டாக்டர் சுகுமார் கூறுவது.

நெல்லை பகுதியில் 92ன் ஆண்டு பெய்த பெரும் மழை வெள்ளத்தின் போது ஏராளமான மலைப்பாம்புகள் தாமிரபரணியில் அடித்து வரப்பட்டது. இவை ஆங்காங்கே கரை ஒதுங்கி இனப்பெருக்கம் செய்தன. அப்போது முதல் மலைப்பாம்புகள் நீர் நிலைகளிலும் கரையோரங்களிலும் அடிக்கடி பிடிபடுகின்றன.

 

 A seven-year-old python caught with 30 eggs in nellai


ஆனால் முட்டைகளுடன் இப்பகுதியில் மலைப்பாம்பு பிடிபட்டது இதுவே முதல்முறை. இந்த பாம்பிற்கு ஏழு வயது இருக்கலாம் 19 கிலோ எடை உள்ளது. மலைப்பாம்புகள் ஆண்டிற்கு முதல் மூன்றுமுறை முட்டைகள் இடும். ஒரு முறை 20 முதல் 35 முட்டைகள் வரை இடும் குஞ்சு பொறிக்கும். இவை 40 வயது வரை வாழும் தன்மையுடையது.

அடுத்த 35 நாட்களுக்கு பின்னர் குஞ்சுகள் வெளியில் வரும். தற்போது 35 நாட்கள் கழிந்து விட்டதால் தாய் பாம்பின் அடை காப்பு தேவை இல்லை. இதனால் தாய் பாம்பை மட்டும் மணிமுத்தாறு தலையணை அருவி பகுதியில் இயற்கை சூழலில் விட்டுவிடுவோம் 30 முட்டைகளை அதற்கு தேவையான வெப்பநிலை நிலையில் பாதுகாத்து குஞ்சுகள் வெளியேவர ஏற்பாடு செய்வோம் பின்னர் அவை பத்திரமாக வனப்பகுதியில் விடப்படும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.