Skip to main content

தொடரும் கைது; அடுத்தடுத்து சிக்கும் வருவாய்த்துறை அலுவலர்கள்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Sethpattu taluk revenue officer arrested for taking bribe

திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் தாலுகா செய்யானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன் வரதராஜ். இவர் போட்டோகிராபராக வேலை செய்து வருகிறார். இவருடைய அண்ணன் முறை உறவினரும், எதிர் வீட்டில் வசிக்கும் ஹரிகிருஷ்ணன் கடந்த 2023 ஆம் ஆண்டு அதே ஊரைச் சார்ந்த சௌபாக்கியம் என்பவரிடம் இடம் வாங்கி கிரயம் செய்துள்ளார். அந்த இடம் உட்பிரிவுகள் செய்யாமல் கூட்டு பட்டாவாக வைக்கப்பட்டுள்ளது. தான் இடம் வாங்கி உள்ளதாகவும் அதனால் பட்டாவை உட்பிரிவு செய்து தனது பெயருக்கு மாற்றி தருமாறு 2023ல் மனு செய்துள்ளார். முறையான காரணமில்லாமல் இவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இதுப்பற்றி தன் தம்பி சகாதேவனிடம் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி சேத்பட் தாலுகா அலுவலகம் வந்து சர்வேயர் தீனதயாளன் அவர்களைச் சந்தித்தார். அப்போது, நீங்கள் இடம் கிரயம் பெற்றால் மட்டும் போதுமா?  நீங்கள் ஏன் என்னை வந்து சந்திக்கவில்லை என்று கேட்டவர், அந்த இடம் மூன்று பட்டாவுக்கு பெயர் மாற்ற ரூ.4 ஆயிரம் வீதம் மொத்தம் மூன்று பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.12 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இவர்கள் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று சொன்னவுடன் ரூபாய் 10,000 தர வேண்டும் என்று சொல்லி உள்ளார். அதற்கு அவர்கள் ரூபாய் 5000 வேண்டும் என்றால் முன்பணம் தருகிறோம், பின்பு பட்டா பெயர் மாற்றம் செய்த பிறகு தருகிறோம் என்று வந்து விட்டார்கள்.

இது சம்பந்தமாக ஹரி கிருஷ்ணனுடைய தம்பி சகாதேவன் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திருவண்ணாமலை விஜிலென்ஸ் அலுவலகம் வந்து டி.எஸ்.பி வேல்முருகனிடம் புகாரை கொடுக்க, அவரும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பிப்ரவரி 22 ஆம் தேதி மதியம் சுமார் 12.30 மணி அளவில் தாலுக்கா அலுவலகத்தில் வைத்து, சகாதேவன் லஞ்ச பணத்தை கொடுக்கும் போது, தன்னுடைய அலுவலகத்திலேயே வைத்து பணத்தை பெற்றுக் கொண்டார். அங்கிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பணத்தோடு அவரை பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். ஒரு மாதத்திற்கு முன்பு தான் இதேபோல் போளூரில் வருவாய்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ட்ராப் செய்து ஒரு அலுவலரை லஞ்சப்பணத்தோடு கைது செய்தனர். இந்த மாதம் சேத்துப்பட்டில் சர்வே அலுவலகத்தில் ட்ராப் செய்து சர்வேயரை கைது செய்துள்ளனர்.

லஞ்சம் வாங்கி வருவாய்த்துறையினர் அடுத்தடுத்து கைது செய்யப்படுகின்றனர். ஆனாலும் இவர்கள் மாறாமல் லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக இருக்கின்றனர். இந்த லஞ்ச கைதுகள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.