Skip to main content

கமலா ஹாரிஸின் சொந்த ஊரில் இனிப்பு வழங்கி குதுகலம்!

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

serve sweets in kamala Harris hometown

 

ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று பதவி ஏற்க உள்ள கமலா ஹாரிஸ்க்கு மன்னார்குடி அருகே உள்ள கிராம மக்கள்  பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

 

ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கமலா ஹாரிஸின் அம்மா பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம்.

 

serve sweets in kamala Harris hometown

 

அந்த கிராமத்தை  பூர்வீகமாக கொண்டவர் என்பதால் கமலா ஹாரிஸ் போட்டியிட்ட நாளில் இருந்தே கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் என விழாக்கோலமாக கொண்டாடினர். அவர் வெற்றிபெற்று அமெரிக்காவின்  முதல் பெண் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டு இன்று பதவி ஏற்றதும், துளசேந்திரபுரம் கிராமமக்கள் அவரது தாய் பிறந்த கிராமத்தில் உள்ள தர்ம சாஸ்தா குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

 

serve sweets in kamala Harris hometown

 

அதனைத் தொடர்ந்து குழந்தைகள் கமலா ஹாரிசின் உருவம்பொறித்த பதாகைகளை கையில் வைத்து  கமலா ஹாரிஸ் வாழ்க என முழக்கமிட்டு பட்டாசு வெடித்து  இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.