Skip to main content

தனி மாவட்ட விவகாரம்... மயிலாடுதுறை சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்!

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

நாகை மாவட்டத்தில் இருக்கும் மயிலாடுதுறையை பிரித்து தனி மாவட்டமாக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கை கடந்த ஒரு வாரகாலமாக போராட்டமாக மாறி இருக்கிறது.

 Separate district issue ... Lawyers blocking Mayiladuthurai legislative office!


கடந்த 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசியை புதிய மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டை தனி மாவட்டமாகவும், அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கும்பகோணம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக விரைவில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும், என்றும்  கூறினார். இதை சற்றும் எதிர்பார்த்திடாத மயிலாடுதுறை பதற்றம் ஆனது. வர்த்தகர்கள் கடைகளை நான்கு நாட்கள் அடைத்து எதிர்ப்பை பதிவுசெய்தனர். வழக்கறிஞர்கள் ஐந்து நாட்களாக நீதிமன்றங்களை புறக்கணித்து கோட்டாட்சியரிடம் மனு கொடுத்ததோடு பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்டோ ஓட்டுனர்கள், தட்டுவண்டி தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 Separate district issue ... Lawyers blocking Mayiladuthurai legislative office!


இந்த நிலையில் ஐந்தாவது நாள் போராட்டமாக இன்று மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முற்றுகையிடப்போவதை தெறிந்துகொண்ட காவல்துறை நூற்றுக்கும் அதிகமான போலிஸாரை குவித்திருந்தனர். வங்கிகள் உள்ள பகுதி என்பதால் முன்னெச்சரிக்கையாக இரண்டு பகுதிகளிலும் அரண்கள் அமைத்து காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.  

பேரணியாக வந்த வழக்கறிஞர்கள் பேரிகாடை தள்ளிவிட்டு சட்டமன்ற அலுவலகத்தின் வாசலுக்கு சென்று கோஷமிட்டபடி முற்றுகையிட்டனர். அங்கு சட்டமன்ற அலுவலர் இல்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் வேலூர் இடைத்தேர்தலில் இருப்பதாகவும் அங்கு குவிக்கப்பட்டிருந்த அதிமுகவினரும், உதவியாளர்களும் கூற, கொண்டுவந்த மனுவை சட்டமன்ற அலுவலகத்தின் வாசலில் ஒட்டிவிட்டு சென்றனர்.

 

 Separate district issue ... Lawyers blocking Mayiladuthurai legislative office!


இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் அறிவொளி, சேயோன், சிவச்சந்திரன், கார்த்திக் உள்ளிட்டோர் கூறுகையில்," மயிலாடுதுறை தனி மாவட்ட கோரிக்கை இன்று நேற்று உருவானதல்ல கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கோரிவருகிறோம். தமிழக அரசு மயிலாடுதுறைக்கு தனி மாவட்ட அந்தஸ்து கொடுக்க ஏன் தயங்குகிறது என்பது எங்களுக்கு புரியவில்லை. அதோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடுத்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கும் எண்ணத்தில் அதற்கான வேலைகளை துவங்கினார். ஆனால் அதை புறந்தள்ளும் விதமாக அவர் வழியில் ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிச்சாமி இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க மறுத்து விட்டார். இரண்டு புதிய மாவட்டங்களை அறிவிக்கும்போதும் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க உள்ளோம், என்று கூறும் போதும் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி, ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவை சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் வாய்மூடி மௌனிகளாக இருந்துவிட்டு, இரண்டு மாவட்டங்களை அறிவிக்கும் போது கைதட்டி சந்தோசத்தை வெளிப்படுத்தியது மயிலாடுதுறை மக்களுக்கு நஞ்சை விதைத்து போல் இருந்தது.

அதனால் அவர் உடனே சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அழுத்தம் கொடுத்து மயிலாடுதுறையை தனி மாவட்டத்தை பெற்றுதர வேண்டும். இல்லையென்றால் அவர்களை மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் தொகுதி மக்களே பதவி விலகவைப்பார்கள்." என்கிறார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Mayiladuthurai Congress candidate announcement!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆறாவது பட்டியலை நேற்று (25.03.2024) காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. அதில் மொத்தம் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த அறிவிப்பில் தமிழகத்தின் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் தமிழகத்தின் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா போட்டியிட உள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இவர் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வருபவர் ஆர். சுதா. தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மாணவப் பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறார்.