Skip to main content

தனி மாவட்ட விவகாரம்... மயிலாடுதுறை சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்!

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

நாகை மாவட்டத்தில் இருக்கும் மயிலாடுதுறையை பிரித்து தனி மாவட்டமாக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கை கடந்த ஒரு வாரகாலமாக போராட்டமாக மாறி இருக்கிறது.

 Separate district issue ... Lawyers blocking Mayiladuthurai legislative office!


கடந்த 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசியை புதிய மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டை தனி மாவட்டமாகவும், அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கும்பகோணம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக விரைவில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும், என்றும்  கூறினார். இதை சற்றும் எதிர்பார்த்திடாத மயிலாடுதுறை பதற்றம் ஆனது. வர்த்தகர்கள் கடைகளை நான்கு நாட்கள் அடைத்து எதிர்ப்பை பதிவுசெய்தனர். வழக்கறிஞர்கள் ஐந்து நாட்களாக நீதிமன்றங்களை புறக்கணித்து கோட்டாட்சியரிடம் மனு கொடுத்ததோடு பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்டோ ஓட்டுனர்கள், தட்டுவண்டி தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 Separate district issue ... Lawyers blocking Mayiladuthurai legislative office!


இந்த நிலையில் ஐந்தாவது நாள் போராட்டமாக இன்று மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முற்றுகையிடப்போவதை தெறிந்துகொண்ட காவல்துறை நூற்றுக்கும் அதிகமான போலிஸாரை குவித்திருந்தனர். வங்கிகள் உள்ள பகுதி என்பதால் முன்னெச்சரிக்கையாக இரண்டு பகுதிகளிலும் அரண்கள் அமைத்து காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.  

பேரணியாக வந்த வழக்கறிஞர்கள் பேரிகாடை தள்ளிவிட்டு சட்டமன்ற அலுவலகத்தின் வாசலுக்கு சென்று கோஷமிட்டபடி முற்றுகையிட்டனர். அங்கு சட்டமன்ற அலுவலர் இல்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் வேலூர் இடைத்தேர்தலில் இருப்பதாகவும் அங்கு குவிக்கப்பட்டிருந்த அதிமுகவினரும், உதவியாளர்களும் கூற, கொண்டுவந்த மனுவை சட்டமன்ற அலுவலகத்தின் வாசலில் ஒட்டிவிட்டு சென்றனர்.

 

 Separate district issue ... Lawyers blocking Mayiladuthurai legislative office!


இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் அறிவொளி, சேயோன், சிவச்சந்திரன், கார்த்திக் உள்ளிட்டோர் கூறுகையில்," மயிலாடுதுறை தனி மாவட்ட கோரிக்கை இன்று நேற்று உருவானதல்ல கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கோரிவருகிறோம். தமிழக அரசு மயிலாடுதுறைக்கு தனி மாவட்ட அந்தஸ்து கொடுக்க ஏன் தயங்குகிறது என்பது எங்களுக்கு புரியவில்லை. அதோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடுத்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கும் எண்ணத்தில் அதற்கான வேலைகளை துவங்கினார். ஆனால் அதை புறந்தள்ளும் விதமாக அவர் வழியில் ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிச்சாமி இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க மறுத்து விட்டார். இரண்டு புதிய மாவட்டங்களை அறிவிக்கும்போதும் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க உள்ளோம், என்று கூறும் போதும் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி, ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவை சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் வாய்மூடி மௌனிகளாக இருந்துவிட்டு, இரண்டு மாவட்டங்களை அறிவிக்கும் போது கைதட்டி சந்தோசத்தை வெளிப்படுத்தியது மயிலாடுதுறை மக்களுக்கு நஞ்சை விதைத்து போல் இருந்தது.

அதனால் அவர் உடனே சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அழுத்தம் கொடுத்து மயிலாடுதுறையை தனி மாவட்டத்தை பெற்றுதர வேண்டும். இல்லையென்றால் அவர்களை மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் தொகுதி மக்களே பதவி விலகவைப்பார்கள்." என்கிறார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஆதினத்துக்கு மிரட்டல்; பள்ளி தாளாளரின் ஜாமீன் மனுவில் நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். 

The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தனக்கு சர்க்கரை நோய், இருதய பாதிப்பு இருப்பதால், தொடர்ந்து சிறையில் இருந்தால் உடல்நிலை பாதிக்கப்படும். எனவே, நிபந்தனை ஜாமீன் பேரில் என்னை விடுவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று (24-04-24) வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ‘இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, பள்ளி தாளாளர் குடியரசுவை ஜாமீனில் விடுவிக்க கூடாது’ எனக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி தமிழ்ச்செல்வி, குடியரசுவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.