Skip to main content

 செந்தில்பாலாஜியின் கேள்வியும் எஸ்கேப் ஆன அமைச்சரும் ! 

Published on 26/05/2019 | Edited on 26/05/2019

 


கரூர் அரசியலில் தான் உச்சக்கட்ட அனைத்து கருத்து மோதல்களும், தேர்தல் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே வந்தது. அதுவும் அதிமுகவில் இருந்து அமமுக சென்று பின்பு அங்கிருந்து தி.மு.கவிற்கு வந்து முக்கிய பொறுப்பு வாங்கிய செந்தில்பாலாஜியை அரசியலில் வெளியேற்றுவதற்கு அனைத்து கட்சியினரும் இணைந்து செயல்பட்டனர். ஆனால் அத்தனை அரசியல்ரீதியான பிரச்சனைகளுக்கும் வாங்கிய ஓட்டுகள் மூலம் பதில் அளித்தார் செந்தில்பாலாஜி 

 

s

 

கரூர் அரவக்குறிச்சி சட்டசபை இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, பாத்திரிகையாளர்களிடம் பேசியபோது,   அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே, இந்த முறை தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போட வாக்காளர்கள் முடிவு செய்து விட்டனர். 

 

தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு. இதையும் தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர். அரவக்குறிச்சி தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். தேர்தலில் வெற்றி, தோல்வியை முடிவு செய்வது வாக்காளர்கள்தான்.

 

ஆனால், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  நான் தேர்தலில் டிபாசிட் பெற்று விட்டால், அரசியலை விட்டு விலகி விடுவதாகவும், பதவியை ராஜினாமா செய்து விடுவதாகவும் கூறினார். அவர் விரைவில் பதவியை ராஜினாமா செய்வார் என நினைக்கிறேன். பத்திரிகையாளர்களே கேட்டு சொல்லுங்கள். அப்படி செய்தால், கரூர் சட்டசபை தொகுதிக்கு விரைவில் தேர்தல் வரும். அதிலும், தி.மு.க.,வே வெற்றி பெறும் என்று பொரிந்து தள்ளினார். 

 

செந்தில்பாலாஜி எழுப்பிய இந்த அதிரடி கேள்விக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் கூறுகையில், ''செந்தில் பாலாஜி , அ.ம.மு.க.,வில் இருந்தபோது, எம்.பி., - எம்.எல்.ஏ., தேர்தலில் நின்று டிபாசிட் வாங்கினால், நான் அரசியலில் இருந்து விலகுவேன் என்றேன். ஆனால், அ.ம.மு.க.,வில் இருந்தால் வெற்றி பெற முடியாது என, தி.மு.க.,வுக்கு சென்று வெற்றி பெற்றுள்ளார். எனவே, ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அ.ம.மு.க., சார்பில், அவர் நின்றிருந்தால் டிபாசிட் பெற்றிருக்க முடியுமா,” என்று எதிர் கேள்விட்டு எஸ்கேப் ஆனார்.! 

சார்ந்த செய்திகள்

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

'செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு'-அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
'Senthil Balaji's Bail Petition'-Judge Anand Venkatesh ruled

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

மேலும், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு கடந்த (16.02.2024) தேதி குறிக்கப்பட்டிருந்தது. இதற்காக, ‘செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்’ என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். அப்போது இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை, அமர்வு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணை தொடர்பான செந்தில் பாலாஜியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டு பதிவைத் தள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இந்தநிலையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததோடு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கை மூன்று மாதத்தில் முடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.