Skip to main content

உணவகம் என்ற பெயரில் பாலியல் தொழில்; போலீஸின் நடவடிக்கையால் அம்பலமான உண்மை

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

sensational incident at Velankanni

 

உணவகம் என்ற பெயரில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த சம்பவம் வேளாங்கண்ணி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள முச்சந்தி பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் சேகர் உணவகம் என்கிற பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த ஹோட்டல் பிசினஸும் தடபுடலாக நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், இந்த ஹோட்டல் மாடியில் இளம்பெண்னை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 

அதன்பேரில், சம்மந்தப்பட்ட இடத்திற்கு மாற்று உடையில் சென்ற போலீசார், அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, போலீசாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் திடீரென ஹோட்டலுக்குள் புகுந்து, அங்குள்ள அறைகளை சோதனை செய்ததில், அந்த ஹோட்டலில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்துவந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த ஹோட்டல் உரிமையாளரான பக்கிரி சாமியை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன்பிறகு, அந்த ஹோட்டலில் இருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த இளம்பெண்ணை அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

 

இந்நிலையில், பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தளமான வேளாங்கண்ணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான லாட்ஜ்க்கள் இருக்கின்றது. அத்தகைய லாட்ஜ்கள் அனுமதியோடும் அனுமதியில்லாமலும் இயங்கி வருகிறது. அதே சமயம், இவற்றில் பெரும்பான்மையான லாட்ஜ்களில் பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது. இது காவல்துறையினருக்கும் நன்றாகத் தெரியும் எனக் கூறப்படுகிறது. அவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு இதைக் கண்டும் காணாததும் போல் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் வேளாங்கண்ணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.