Advertisment

மூத்த பத்திரிகையாளர் என்.ராம் வாக்களிப்பு! (படங்கள்) 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அரசியல் பிரமுகர்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் தனது வாக்கை செலுத்தினார். மேலும், அந்த வாக்குச் சாவடியில் பொதுமக்கள் ஏராளமானோரும் வாக்களித்தனர்.

Advertisment

local body election
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe