ADVERTISEMENT

மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி பிறந்தநாள் 8 ஆம் ஆண்டு நினைவு விருது வழங்கும் விழா(படங்கள்)

03:26 PM Jun 15, 2019 | kalaimohan

ADVERTISEMENT

மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி அய்யா அவர்களின் பிறந்தநாள் 8 ஆம் ஆண்டு நினைவு விருது வழங்கும் விழா இன்று சென்னை முத்தமிழ் பேரவை திருவாடுதுறை தி.என். ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த விழாவில் நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் வரவேற்புரையாற்றினார். விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சௌந்தரபாண்டியன் தலைமை வகித்தார். அதேபோல் திராவிட இயக்க ஆய்வாளர், எழுத்தாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.

சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பில் சிறந்த கட்டுரைகளுக்கான விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றி கவிப்பேரரசு வைரமுத்து சிறப்பித்தார். நக்கீரன் மற்றும் புனே ஸ்ரீ பாலாஜி சொசைட்டி கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய கவிதை போட்டியில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் புனே ஸ்ரீபாலாஜி சொசைட்டி கல்வி நிறுவன தலைவர் கர்னல் டாக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT