Skip to main content

“8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மினி லேப்டாப்பு வழங்கப்படும்...” அமைச்சர் செங்கோட்டையன்

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசும் போது "நடைபெறவிருக்கிற பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை  எங்களுக்கு வெற்றி உறுதியாகிவிட்டது முதல்வர் இதுவரை 34 பாராளுமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்துள்ளார் அனைத்து தொகுதிகளும் முதல்வரை மக்கள் மலர்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

 

sengottaiyan

 

மக்கள் ஆதரவும் எங்களுக்கு பெருகி உள்ளது.  முதல்வரும் துணை முதல்வரும் ஒருங்கிணைந்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்து வருகிறார்கள். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இரண்டாயிரம்  வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்தார். அந்த திட்டம் ஒரு கோடி பேருக்கு வழங்கப்பட உள்ளது. சென்னையில் நடந்த உலக  முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 3 லட்சத்தி 431 கோடிக்கு அந்நிய முதலீடு செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் இது போன்று எங்குமே நடைபெறவில்லை. வரும் ஜூன் மாதம் இறுதிக்குள் 28 லட்சம் மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கப்படும்.


மேலும் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மினி லேப்டாப்பும் வழங்கப்படும்.  அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது உதாரணமாக வேளாண் சம்மந்தமான வாக்குறுதிகள் நதிகள் இணைப்பு  இவற்றை கூறலாம்.  நடைபெற உள்ள இருபத்தி இரண்டு சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அ.தி.மு.க.உறுதியாக வெற்றி பெறும். எதிர்க் கட்சிகள் என்ன அரசியல் செய்தாலும் எடுபடப்போவதில்லை. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அருகே இருந்த தொண்டர்கள் ‘அண்ணே மகத்தான வெற்றி பெறுவோம்னு சொல்லுங்க’ என கூற 'ஏப்பா கிண்டல் பன்றீங்க' என பதில் கூறுவது போல் பார்வை பார்த்து விட்டு வண்டி ஏறி சென்றார் செங்கோட்டையன்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“2024ல் அதிமுக வெற்றி பெறுவதற்கான நிகழ்வாக இது இருக்கும்” - செங்கோட்டையன்

Published on 09/04/2023 | Edited on 09/04/2023

 

“This will be the event for AIADMK to win in 2024” - Sengottaiyan

 

ஈரோடு மாவட்ட அதிமுக தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஈரோடு மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் கலந்து கொண்டபின் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், ““இப்போது முதல்கட்டமாக படிவம் வழங்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கட்டளையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இந்த பணிகள் வேகமாக நிறைவேறி வருகிறது. இந்த படிவங்களை பூர்த்தி செய்த பின் அடையாள அட்டைகள் அதிமுக சார்பில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் நிகழ்ச்சியாக உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்வு அமைந்துள்ளது. திருப்புமுனையாக 2024 தேர்தல் அமையும். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை தமிழ் மண்ணில் யாராலும் அசைக்க முடியாது என்ற வரலாற்றை படைக்கும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்.

 

அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார். எந்த தொழிற்சாலைகளையும் உருவாக்கக் கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அங்கிருக்கும் விவசாயிகளும் பராட்டுக்கூட்டத்தை நடத்தினர். அதிமுக பாஜகவிற்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ப பிரதமரை சந்திப்பார்” எனக் கூறினார்.

 


 

Next Story

2026ல் அண்ணாமலை தலைமையில் பாஜக ஆட்சி? - முன்னாள் அமைச்சர் பதில்

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

Annamalai-led BJP rule in 2026? The former minister replied

 

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.

 

இந்நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு தற்போது தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் உள்ள அதிமுகவில் புதிதாக உறுப்பினர் சேர்க்கையை நேற்று மாலை துவக்கி வைத்தேன். ஏனென்றால் புனித வெள்ளியான நேற்று ஒரு நகரச் செயலாளரிடத்தில் படிவங்களைக் கொடுத்து உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தேன்.

 

இன்று அனைத்து ஒன்றிய கழகச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பேரூராட்சி நகரச் செயலாளர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். இனி அதிமுக என்பது தமிழகத்தில் அசைக்க முடியாத ஒன்று என்று இந்த உறுப்பினர் சேர்க்கையில் உருவாக்கிக் காட்டுவோம். 

 

அண்ணாமலை தலைமையில் 2026ல் பாஜக ஆட்சி அமையும் எனச் சொல்கிறார்கள். 2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும். அதில் எந்த மாற்றங்களும் இல்லை. சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் பற்றி உரையாற்றியுள்ளேன். அந்த உரையை உங்களுக்கு வழங்குகிறேன்” எனக் கூறினார்.

 

தொடர்ந்து செய்தியாளர்கள், “அதிமுகவில் ஒற்றைத் தலைமை எனச் சொல்கிறீர்கள். ஆனால், பிரதமர் ஓபிஎஸ், இபிஎஸ் என இருவரையும் சந்திக்கிறார்” என கேள்வி எழுப்பியதற்கு, “அதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “குறைந்தது ஒரு தொகுதியில் 75 ஆயிரம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். குறைந்தது இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பது இலக்கு” என்றார்.