தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்றும், 30-ம் தேதியும் என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் ஜனவரி 2-ம் தேதி எண்ணப்படவுள்ளன.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
ஊரகப் பகுதிகளில் இன்று முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் காலை முதல் மக்கள் அர்வத்துடன் வந்து தங்கள் வாக்கை செலுத்தினார்கள். அந்தவகையில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மிகவும் அமைதியான முறையில் பஞ்சாயத்து தேர்தல் நடந்து வருகிறது. அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என செங்கோட்டையன் கூறினார்.